நாகப்பட்டினம், மார்ச் 17- நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர், சாட்டி யக்குடி, ஆகிய இடங்களில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீழ்வேளூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விச ஒன்றியச் செயலா ளர் எஸ்.பாண்டியன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் பி.எஸ்.பெருமாள் கண்டன உரையாற்றினார். கீழ்வேளூர் வடக்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் என். எம்.அபுபக்கர், விச மாநில குழு உறுப்பி னர் எம்.சாந்தி, மாவட்ட குழு உறுப்பினர் எல். ராஜேந்திரன், விதொச ஒன்றிய செயலா ளர் டி.துரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். சாட்டியக்குடியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு விச ஒன்றியச் செயலாளர் எஸ்.மதியழகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கோவை.சுப்பிர மணியன் கண்டன உரையாற்றினார். கீழ்வே ளூர் தெற்கு ஒன்றிய சிபிஎம் செயலாளர் ஆர்.முத்தையன், விதொச ஒன்றியச் செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, விச ஒன்றியத் தலைவர் எஸ்.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்
கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட துணை செயலா ளர் கணேசன் தலைமை வகித்தார். தேவ னாஞ்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜா ராமன், ஒன்றிய தலைவர் குணசேகரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க ஜீவபாரதி, திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் சங்கர், பக்கிரிசாமி, திருவிடைமருதூர் தெற்கு முருகன் ஆகியோர் விளக்கிப் பேசினர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.