நாகப்பட்டினம், நவ.8 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு வழங்கியது போன்று, தமிழக அரசும் 1.7.2022 முதல் அக விலைப்படி உயர்வு வழங்கிட வேண்டும். அரசு வேலைவாய்ப்பை தனியாருக்கு தாரைவார்க்க வழிவகை செய்யும் அரசாணை எண்.115-ஐ ரத்து செய்ய வேண்டும். முதலமைச்சர் சென்னை தீவுத்திடலில் வழங்கிய உறுதிமொழிப்படி, அரசு ஊழியர்களின் நிலுவை கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். சாலை பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை வரன்முறை செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலை வர் பா.ராணி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் அ.தி.அன்பழகன் விளக்க உரை யாற்றினார். வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் தனஞ் செயன், ஊரக வளர்ச்சி துறை அலு வலர் சங்க மாநிலச் செயலாளர் ஜமுருத் நிஷா, நகராட்சி ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் சி.பால சுப்பிரமணியன் ஆகியோர் உரை யாற்றினர்.