நாகப்பட்டினம், ஜன.23- நாகப்பட்டினம் மாவட் டம் கீழ்வேளூர் சட்டமன் றத்திற்குட்பட்ட காமேஸ்வ ரம் ஊராட்சிக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான புதிய மூன்று மின் மாற்றிகளை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வந் தார். காமேஸ்வரம் ஊராட்சி யில் உள்ள ஆனையன் தோப்பு, வேட்டர்காடு, நாவதோப்பு ஆகிய மூன்று பகுதிகளுக்கு சுமார் 300 குடும்பங்கள் பயன்படும் வகையில் புதிய மூன்று புதிதாக மின்மாற்றி கள் அமைக்கப்பட்டு, மக் கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்வு திங்களன்று நடைபெற்றது. நிகழ்வில் நாகப்பட்டி னம் மாவட்ட செயற்பொறி யாளர் ஏ.சேகர், உதவி செயற்பொறியாளர் வி.ராஜ மனோகரன், வேளாங் கண்ணி இளநிலை பொறி யாளர் ஏ.ராய்ட்சன், காமேஸ் வரம் ஊராட்சி மன்ற தலை வர் ஜெயசுதா கணேசன், சிபிஎம் கிளைச் செயலாளர் சிவராஜ், ஒன்றியக் குழு உறுப் பினர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.