நாகப்பட்டினம். டிச.4 - 2022-2023 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானிய கோரிக்கையில் ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 இணைகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 இணைகளுக்கு கோயில்களில் திரு மணங்கள் நடத்தப்படும். இதற்கான செலவினத்தை திருக்கோயில்களே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை செயல்படுத்தி டும் வகையில், நாகை மற்றும் திருவா ரூர் மாவட்டங்களை சேர்ந்த 25 ஜோடி களுக்கு நாகப்பட்டினம் நீலாயதாட்சி கோவிலில் ஒரே நேரத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மணமக்க ளுக்கு இரண்டு கிராம் தாலி, மெட்டி, சீர்வரிசை பொருட்கள், மணமக்களுக் கான ஆடைகள் உள்ளிட்டவை இலவச மாக வழங்கப்பட்டன. புதுமண தம்பதி களுக்கு 47 வகையிலான சீர்வரிசை பொருட்கள் உடனடியாக வழங்கப் பட்டன. இதுகுறித்து புதுமணத் தம்பதிகள் கூறுகையில், வீட்டில் திருமணம் செய்து வைப்பதுபோன்று, தமிழக அரசின் சார்பாக அறநிலையத்துறை அதிகாரி கள் திருமணத்தை நடத்தி வைத்திருப் பது புதிய அனுபவத்தை கொடுத்ததாக வும் இதனை ஏற்பாடு செய்த தமிழக அரசிற்கு நன்றியையும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்புராஜ், மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌத மன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னர் நலத்துறை தலைவர் உ.மதிவா ணன், நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், நாகை நகர் மன்ற தலைவர் இரா.மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி மண்டல இணை ஆணையர் மண்டலத்திற்குட்பட்ட திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 18 இணைகளுக்கு ஞாயிறன்று அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப் பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி யர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் பங்கேற்றனர்.
கும்பகோணம்
மயிலாடுதுறை இணை ஆணை யர் மண்டலத்திற்கு உட்பட்ட கும்பகோ ணம் அருகே ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாசலபதி திருக்கோயிலில் முதல் கட்டமாக தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், மாநி லங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாண சுந்தரம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழ கன், கும்பகோணம் மாநகர மேயர் சர வணன் மற்றும் துணை மேயர் சு.ப. தமிழழகன் ஆகியோர் முன்னிலையில் 6 திருமண இணைகளுக்கு திரு மணத்தை நடத்தி வைத்தனர். இவ்விழாக்களில் சட்டமன்ற உறுப் பினர்கள் இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், மணமக்களின் பெற் றோர், உறவினர்கள் கலந்து கொண்ட னர்.