districts

நில மோசடி செய்த தம்பியால் பாதிக்கப்பட்டவர் ஆட்சியர் முன் தற்கொலைக்கு முயற்சி

தேனி, ஜூன் 13- நில மோசடி செய்த தம்பியால் பாதிக்  கப்பட்ட விவசாயி ஒருவர் தேனி ஆட்சி யர் முன்னிலையில் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது . ஆண்டிபட்டி வட்டம் அம்மச்சியா புரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கரசாமி  மகன் அமைதிராஜ் (56). இவரது குடும்  பத்திற்கு சொந்தமான ஆறு ஏக்கர் 66 சென்ட் நிலத்தை இவரது தம்பி திருக் குமார் என்பவர் பராமரித்து வந்தார். 1995- ஆம் ஆண்டு இவரது தந்தை சங்கரசாமி இறந்து விட்ட நிலையில் இவரது அண்ணன் பெரியகருப்பன் ரூ.50 ஆயிரத்திற்கும், நான் ரூ 30 ஆயி ரத்திற்கும் ஒத்தி வைத்து திருக்குமாரிடம் பணம் பெற்றுள்ளனர். இந்நிலையில் திருக்குமார், அடகு வைத்த மொத்த நிலத்தையும் போலி ஆவணம் மூலம் பட்டா மாறுதல் செய்து,  எம்.சுப்புலாபுரம் கூட்டுறவு வங்கியில்  ரூ.3 லட்சம், தேனி ஸ்டேட் வங்கியில்  ரூ.5 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்த மோசடி குறித்து காவல்துறையில் புகார்  அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த அமைதிராஜ் திங்களன்று தேனி ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தான்  கொண்டு வந்த மண்ணெண்ணெய்  கேனின் மூடியை திறக்க முயன்ற போது பணியில் இருந்த காவலர்கள் மீட்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர். தேனி ஆட்சியர் முன்னிலையில் விவ சாயி தற்கொலைக்கு முயன்ற சம்ப வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.