தேனி, பிப்.1- பெரியகுளம் அருகே பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் பெரியகுளம் சார் ஆட்சி யர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. பெரியகுளம் அருகே கீழவட கரை ஊராட்சி 4 மற்றும் 5ஆவது வார்டு பகுதியில் 500-க்கும் மேற் பட்ட மக்கள் வசித்து வருகின்ற னர். இங்கு 3 தெருக்களின் பொதுப் பாதை கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளதை அகற்ற கோரிக்கை விடுத்தனர். பலமுறை அதிகாரி களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர். இந்த பொதுப்பாதை சம்பந்த மாக இதுவரை தீர்வு கிடைக்காத நிலையில் பெரியகுளம் சார் ஆட் சியர் அலுவலகத்தை 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மாவட்டக்குழு உறுப் பினர் பி.இளங்கோவன், சவுந்திர பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சார் ஆட்சியர் ரிஷபை சந்தித்து கோரி க்கை மனுவை அளித்துச் சென்றனர்.