districts

img

தேனி மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.6.35 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தேனி, பிப்.20- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா 11 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 35 ஆயிரத்து 490 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி னார். இக்கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் சார்பில் 10 பய னாளிகளுக்கு தலா ரூ.13,549 வீதம் ரூ.1,35, 490 மதிப்பிலான நவீன செயலிகளுடன் கூடிய கைபேசிகளையும், ஆணைமலை யான்பட்டியில் வசித்துவந்த 108 அவசர கால ஊர்தி ஓட்டுநர் உயிரிழந்ததையொட்டி அவரது குடும்பத்தார்க்கு காப்பீட்டுத் தொகையாக ரூ.5இலட்சத்திற்கான காசோலையினையும் ஆட்சியர் வழங்கி னார். இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா.தண்டபாணி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ந.சாந்தி, மாவட்ட வழங்கல் அலு வலர் மு.சாந்தி மற்றும் அரசுத்துறை அலு வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.