தேனி, ஏப்.10- அகில இந்திய பார் வர்டு பிளாக், தமிழகத் தில் திமுக கூட்டணியை யே ஆதரிப்பதாக, அக் கட்சியைச் சேர்ந்த திருப்பூர் கர்ணன் தெரிவித்துள்ளார்.
தேனி அருகே உள்ள கருவேல் நாயக் கன்பட்டியில் செய்தியாளர் சந்திப்பை நடத்திய கர்ணன், “அகில இந்திய பார் வர்டு பிளாக் கட்சி இந்தியா கூட்டணியில் உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி திமுக வுடன் கூட்டணி அமைத்துள்ளது. மாநிலம் முழுவதும் திமுக கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து அவர்களின் வெற்றிக் காக பிரச்சாரம் செய்து வருகிறது. தமிழ் நாட்டில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக கர்ணன் என்ற நான்தான் பொறுப்பு வகிக்கி றேன்.
ஆனால், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலா ளர் நான் தான் என்று, முன்னாள் பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன் பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறார். பி.வி.கதி ரவனுக்கும், தமிழ்நாட்டின் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கும் எந்த சம்பந்த மும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.