districts

img

எரிவாயு விற்பனையாளர் உரிமம் எடுத்து தருவதாக ரூ.21 லட்சம் மோசடி பீகாரை சேர்ந்த  3 பேர் கைது

தேனி, ஜூன் 21- ஆண்டிபட்டியில் எரிவாயு விற்பனையாளர் உரிமம் எடுத்து தருவதாக ஆன்லைனில் ரூ.21லட்சம் மோசடி.செய்த புகாரில் பீகார் மாநி லத்தை சேர்ந்த 3 நபர்களை சைபர்  கிரைம் காவல்துறையினர் விசா ரித்து வருகிறார்கள் . தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டியை சேர்ந்  தவர் பாலமுருகன் (32). எல்.எல்.பி  பட்டதாரியான இவர், கடந்த ஆண்டு  ஆண்டிபட்டியில்  இன்டேன் எரி வாயு விற்பனையாளர் உரிமம் பெற  இணையத்தில் தகவல் தேடியுள் ளார். அப்போது www.lpgvitrakchayan.in என்ற வெப் சைட்டில் தனது பெயர், மொபைல் எண் உள்ளிட்ட சுயவிபரங்களை பதிவு செய்துள்ளார். இதையடுத்து வெவ்வேறு அலைபேசி எண்களில் இருந்து தொடர்பு கொண்ட நபர்,   தான் இன்டேன்  கேஸ் சிலிண்டர் நிறு வனத்தின் எக்ஸ்குயிடிவ் மேனேஜர் என அறிமுகம் செய்து இந்தியில் பேசியுள்ளார்.  ஆனால் இந்தி தெரி யாத பாலமுருகன், இந்திய ராணுவ  வீரரான  தனது உறவினர் சிவக்குமா ரின் உதவியுடன் குரூப் காலில் சம் பந்தப்பட்ட நபரிடம் பேசியுள்ளார்.  அதில் எரிவாயு விற்பனையா ளர் உரிமம்  எடுப்பதற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்  என்ற கம்பெனியின் வங்கி கணக் கிற்கு பணம் ரூ.21,64,700செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். அதனை உண்மை என நம்பிய பால முருகன் அவர்கள் தெரிவித்த வங்கி  கணக்கிற்கு முழுத் தொகையையும் செலுத்தியுள்ளார். ஆனால் அதன்  பின்னர் அவர்களை தொடர்பு கொண்ட போது அனைத்து எண்  களும் சுவிட்ச் ஆப் செய்திருந்ததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந் துள்ளார் பாலமுருகன்.

இதையடுத்து  மோசடி  குறித்து  தேனி மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்தில் பாலமுருகன் கடந்த ஆண்டு அக்டோபரில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சைபர் க்ரைம் போலீசார் பாலமுருகன் பணம் செலுத்திய வங்கி கணக்கின்  விபரங்களை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். கிட்டத்தட்ட 8 மாதத்  திற்கு பின் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு பீகார் மாநிலத்தில் இருந்து பரிவர்த்தனை நடைபெற்றிருந்தது தெரியவந்தது. இதனால் பீகார் சென்ற தேனி சைபர் கிரைம் போலீ சார், சம்பந்தப்பட்ட எண்களின் இருப்  பிட முகவரியை வைத்து ஆய்வு செய்தனர்.  அதில் நவோதா மாவட்டம் பக்ரி பர்வான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தால்போஸ்ட்  பகுதியை சேர்ந்த ரோசன்குமார் (28), ஆசித்  என்ற தீபக்குமார் (27) ஆகியோர்  இந்த மோசடியில் ஈடுபட்டது தெரி யவந்தது. மேலும் இவ்விருவரும் அதே பகுதியில் வேறொரு புகாரில், அம்மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதை யடுத்து தேனி நீதிமன்ற உத்தர வுப்படி பீகார் சிறையில் இருந்த ரோசன் குமார், தீபக்குமார்  மற்றும்  அவர்களுக்கு உதவியாக இருந்த மற்றுமொரு இளைஞரான பல்ராம் (20) ஆகிய மூவரையும் கைது செய்து  தேனிக்கு அழைத்து வந்த சைபர் க்ரைம் போலீசார் அவர்களிடம் விசா ரணை நடத்தினர். அதில் பீகாரை  சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ஒருவரின் தூண்டுதலின் பேரில்  இந்த குற்ற செயலில் ஈடுபட்டதாக வும், மோசடி செய்யப்பட்ட பணம்  முழுவதும் அவரிடம் தான் இருப்ப தாக தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து மூவரையும் செவ்வாயன்று தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சைபர் க்ரைம் போலீசார், அவர் களை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த மோசடியின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பொறி யியல் பட்டதாரியை தீவிரமாக தேடி வருகின்றனர்.