தேனி,பிப்.26- தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா எருமலை நாயக்கன்பட்டி கிராமத்தில் 1 ஆவது வார்டில் பொதுக் கிணறு உள்ளது. இதனை அனைத்து மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். கிணற்றை தூய்மைப்படுத்த வலியுறுத்தி கடந்த ஜனவரி 26 அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த கோரிக்கை மனுவின் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் பிப்ரவரி 26 ஞாயிறன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பொதுக்கிணற்றை சுத்தம் செய்தனர் . சங்க நிர்வாகிகள் விக்னேஷ், மாதவன், சூர்யா ,சிவராமன், பிரேம்குமார் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். வாலிபர் சங்க பெரியகுளம் தாலுகாச் செயலாளர் பெ.பிரேம்குமார். மற்றும் துணைச் செயலாளர் பா.பெருமாள் சாமி ஆகியோரும் பங்கேற்றனர். வாலிபர் சங்கத்தினரின் பணியை பொதுமக்கள் பாராட்டினர்.