தேனி, ஏப். 10 - பாஜகவின் தொங்கு சதைகளான பழனிசாமி - பன்னீர்செல்வம் - தினகரன் ஆகியோருக்கு, பாஜகவுக்கு கொடுக்கும் அதே தண்டனையை கொடுங்கள் என்று வாக்காளப் பெருமக்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி யின் சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் ஆகி யோருக்கு வாக்கு கேட்டு ஏப்ரல் 10 புதனன்று மாலை தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் நடை பெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில், வேட் பாளர்களை அறிமுகப்படுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் போது இதுதொடர்பாக பேசியதாவது:
கடந்தமுறை தமிழ்நாட்டில் ஒரே ஒரு தொகுதி தவிர எல்லாவற்றிலும் வென்றோம். அந்த ஒரே ஒரு தொகுதியான இந்தத் தேனி தொகுதியில் இந்த முறை, தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். உறுதி எடுத்துவிட்டீர்களா? தமிழ்நாட்டின் அனைத்துத் தொகுதிகளையும் வென்று, இந்தியா கூட்டணி யின் ஒன்றிய அரசு மூலமாகத் தமிழ்நாட்டிற்கான எல்லாச் சிறப்புத் திட்டங்களையும் கொண்டு வருவோம். நாம்தான் எல்லாத் தொகுதியிலும் வெல்லப் போகிறோம் என்று தெரிந்து கொண்ட பழனிசாமி, இப்போது என்ன கேட்கிறார்?
மத்திய அரசில் 14 ஆண்டுகள் இருந்த தி.மு.க. என்ன சாதித்தது என்று கேட்கிறார். பலமுறை இதற்குப் பதில் சொல்லி இருக்கிறேன். முதலில் பழனிசாமி அவர்களைப் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன், காலையில் எழுந்ததும் செய்தித்தாள்களைப் படியுங்கள். பழனிசாமி யால் எந்தச் சாதனையாவது சொல்ல முடியுமா? ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும்போதெல் லாம், அ.தி.மு.க. இரண்டே இரண்டு காரியங் களைத்தான் செய்யும். ஒன்று, தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டிருந்தால், அதைக் கலைக்கச் சொல்லுவார்கள்! இல்லை என்றால், தங்கள் மீதான ஊழல் வழக்குகளை வாபஸ் வாங்கச் சொல்லுவார்கள்! இப்படிப்பட்டவர்கள், நம்மைப் பார்த்துக் கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது?
தினமும் அமாவாசை எப்போது என்று காலண்டரில் பார்க்கும், அரசியல் அமாவாசை யான பழனிசாமி என்ன உளறிக் கொண்டு இருக் கிறார்? “ஸ்டாலின் பிரதமர் கனவில் இருக்கிறார், அதற்கு வழியில்லை” என்று உளறிக் கொண்டு இருக்கிறார்! பழனிசாமி அவர்களே… தி.மு.க. - பிரதமர்களை உருவாக்கும் இயக்கம்! குடி யரசுத் தலைவர்களை உருவாக்கும் இயக்கம்! ஒன்றியத்தில் ஜனநாயகம் பாதிக்கப்பட்ட போதெல்லாம், ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். இதுதான் வரலாறு!
நீங்கள் என்ன கனவில் இருந்தீர்கள்? “ஒரே நாடு – ஒரே தேர்தல் என்று பா.ஜ.க. சொல்கிறது நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்றத்திற் கும் தேர்தல் வந்துவிடும்” என்று ‘இலவு காத்த கிளி போன்று’ இருந்தார் பழனிசாமி. அவர் வதந்தி கிளப்பியது போன்று எதுவும் நடக்க வில்லை. அதனால்தான் இப்போது வாய்க்கு வந்ததை எல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார். அம்மையார் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, அனைத்துத் தேர்தலிலும் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் பழனிசாமி அவர்களே! அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க.தான் மாபெரும் வெற்றி பெறும்! பார்த்துக் கொண்டே இருங்கள்! உங்களிடம் இருக்கும் தொகுதிகளையும் சேர்த்தே பறிக்கப் போகிறோம்.
அடுத்து என்ன பேசுகிறார்? ‘அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள்’ என்று சவடால் விடுகிறார்! அ.தி.மு.க. வை அழிக்க வெளியில் இருந்து யாரும் வரத் தேவையில்லை. அதுதான் நீங்களும் – பன்னீர் செல்வமும் - தினகரனும் - அதை போட்டிப் போட்டு செய்துக் கொண்டு இருக்கிறீர்களே! அதற்குப் பிறகு என்ன? அதில் சந்தேகம் வேண்டாம்.
அடுத்து, ‘விவசாயிகளின் கஷ்டங்களைப் பற்றி, ஸ்டாலினும் - உதயநிதியும் பேசவில்லை’ என்று போலிக் கண்ணீர் வடித்திருக்கிறார் பழனிசாமி. விவசாயிகள் உங்கள் ஆட்சியைப் போன்று, கஷ்டத்தில் இருந்தால்தானே, அவர்களின் கஷ்டங்களைப் பேசுவார்கள்! கழக ஆட்சியில் விவசாயிகள் மிகமிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பழனிசாமிக்கு உண்மையிலேயே உழவர்கள்மேல் அவ்வ ளவு அக்கறை இருக்கிறது என்றால், இப்போது ஒன்றிய அரசுக்கு எதிராகப் போராடும் உழவர் களுக்காக ஏன் பழனிசாமி பேசவில்லை? அவர் களுக்காக ஏன் கண்ணீர் வடிக்கவில்லை? அதற்குக் காரணமான மோடியை ஏன் விமர்சிக்கவில்லை?
வேளாண் சட்டங்களை ஆதரித்த பழனிசாமி
மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து உழவர்களின் வயிற்றில் அடித்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு. ஒன்றரை ஆண்டுகள் தலைநகர் தில்லியில் தங்கிப் போராடினார்கள் விவசாயிகள். அவர்கள் தெரிவித்த எதிர்ப்பி னால்தான், பின்வாங்கியது பா.ஜ.க. அரசு. அப்போது பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத் தது ஒன்றிய அரசு. ஆனால், அதையும் கடந்த ஓராண்டு காலத்தில் நிறைவேற்றவில்லை. எனவே மீண்டும் தில்லியில் உழவர்கள் போராட் டம் தீவிரமடைந்து இருக்கிறது. அவர்கள்மேல் இரக்கமற்ற வகையில் தாக்குதல் நடத்தப் பட்டது. எதிரி நாட்டு பயங்கரவாதிகள் போன்று, மோடி அரசு சொந்த நாட்டு உழவர்களை பழிவாங்கியபோது, இந்த பச்சைப்பொய் பழனிசாமி எங்குச் சென்றார்?
உழவர்களுக்கு எப்படிப்பட்ட துரோகத்தை செய்தார் இந்த பழனிசாமி? “மூன்று வேளாண் சட்டங்களால் எந்தப் பாதிப்பும் இல்லை. பாதிப்பு இருப்பதாகச் சொல்கின்றவர்களுடன் நான் விவாதிக்கத் தயார். இந்தச் சட்டம் வந்தால் தமிழ்நாட்டு விவசாயிகள் உத்தரப் பிர தேசத்திற்குச் சென்று வியாபாரம் செய்யலாம்” என்று கப்சா விட்டவர் பழனிசாமி. போராடிய விவசாயிகளை, “அவர்கள் விவசாயிகளே இல்லை; புரோக்கர்கள்” என்று சொன்ன, அரசியல் புரோக்கர்தான் பழனிசாமி. அப்படிப் பட்டவர், இன்றைக்கு விவசாயிகளுக்காக போலிக் கண்ணீர் வடிக்கிறார்.
பழனிசாமி அவர்களே… தி.மு.க. ஆட்சியில் தான், வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறோம். மூன்றே ஆண்டுகளில் இரண்டு இலட்சம் விவ சாயிகளுக்கு மின் இணைப்புகள் கொடுத்திருக் கிறோம்! நீங்கள் கஜானாவைத் தூர்வாரினீர்கள். நாங்கள் டெல்டா மாவட்டங்களில் கால்வாய் களைத் தூர்வாரிக் காவிரியைக் கடைமடைக் கும் கொண்டு சென்றோம்! உணவு அமைச்சர் சக்கரபாணி இருக்கிறார்! ஒவ்வொரு ஆண்டும் கொள்முதலில் சாதனை செய்கி றோம். வேளாண் துறை சார்பில் கண்காட்சி, திருவிழா, சங்கமம் என்று நடத்தி, உழவர்கள் உள்ளத்தில் நம்பிக்கை விதைக்கிறோம். மண்ணும் செழிக்கிறது! மக்களும் செழிக் கிறார்கள்! இதுதான் திராவிட மாடல் ஆட்சி!
இஸ்லாமியர்களுக்கும் துரோகம் இழைத்த எடப்பாடி
உழவர்களுக்கு துரோகம் செய்தது போன்றே, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆத ரித்து வாக்களித்து, சிறுபான்மை இஸ்லாமிய சகோதரர்களுக்கும் துரோகம் செய்தார் பழ னிசாமி. இன்றைக்கு திண்டுக்கல்லில் சிறு பான்மை மக்களைப் பற்றிப் பேச ஆரம்பித்து இருக்கிறார். சி.ஏ.ஏ.வுக்கு எதிராகப் போராடிய பெண்கள் – குழந்தைகள் மேலும் தடியடி நடத்தி ரசித்து, நான் உட்பட இந்தியா கூட்டணி தலை வர்கள் என்று எட்டாயிரம் பேர் மேல் எப்.ஐ.ஆர் போட்டாரே! குடியுரிமைத் திருத்தச் சட்டம் வந்த போது, பழனிச்சாமி என்ன செய்தார்? “எந்த முஸ்லிம் பாதிக்கப்பட்டார்” என்று ஆணவ மாகக் கேட்டார். அ.தி.மு.க.வும் - பா.ம.க.வும் அன்றைக்குக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சட்டமே நிறைவேறி இருக்காது. அது தான் உண்மை. இந்த இரண்டு துரோகத்தை யும் மனதாரச் செய்த கட்சிகள்தான் அ.தி.மு.க வும் - பா.ம.க.வும். இந்தச் சட்டங்களை ஆதரித்து, ஓட்டுபோட்ட பா.ம.க. இப்போது பா.ஜ.க.வுடன் அமைத்திருப்பது சந்தர்ப்பவாதக் கூட்டணி!
மருத்துவர் அய்யா ராமதாசு நிலைமை யைப் பார்த்து அவர்கள் கட்சிக்காரர்களே தலை குனிந்து நிற்கிறார்கள்! இதற்கு மேல் அவரை நான் விமர்சிக்க விரும்பவில்லை.
தெரிந்தே கிணற்றில் விழுவார்களா?
அடுத்து, தேனி தொகுதியில் பாஜக ஆத ரவு பெற்ற வேட்பாளராக ஒருவர் நிற்கிறார். யார்? தினகரன்! இதே பாஜகவைப் பற்றி அவர் என்ன சொல்லி இருந்தார்? “பாஜக கூட்டணியில் சேர்வது தற்கொலை செய்வதற்குச் சமம். யாராவது தெரிந்தே கிணற்றில் விழுவார்களா?” என்று கேட்டவர். இப்போது என்ன தெரிந்தே கிணற்றில் விழ வந்திருக்கிறாரா? என்பதுதான் தேனிக்காரர்கள் கேட்க வேண்டிய கேள்வி. அதுமட்டுமல்ல, இன்னும் பேசியிருக்கிறார். ‘தில்லியில் வேண்டும் என்றால் பெரிய கட்சி யாக - ஆளும் கட்சியாக பாஜக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் அதற்கு என்ன இருக் கிறது? நோட்டாவுடன் போட்டி போடக் கூடிய கட்சிதான் பாஜக” என்று சொன்னவர்தான் இந்த தினகரன். அவரைப் பார்த்து நீங்கள் கேட்க வேண்டும். இன்று நோட்டாவுடன் போட்டி போடத் தேனிக்கு வந்திருக்கிறீர்களா? இல்லை உங்களை வழக்குகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வந்திருக்கிறீர்களா?
நான் சென்ற கூட்டங்களில் சொன்னது போன்று, மோடி வாரண்டியுடன் ஒரு வாஷிங் மெஷின் வைத்திருக்கிறார். அதில் ஊழல்வாதி களை உள்ளே அனுப்பினால், அவர்கள் சுத்த மாகி வெளியே வந்துவிடுவார்கள். “மேட் இன் பி.ஜே.பி.” வாசிங் மெஷின் அது! மேட் இன் ஜப்பான், மேட் இன் அமரிக்கா, மேட் இன் இங்கி லாந்து வாஷிங் மெஷின் இது. அந்தக் கட்சி யுடன் கூட்டணி வைத்துக் கொண்டால், அந்த வாஷிங் மெஷின் வெளுத்துவிடும். அப்படி வெளுக்கப்பட்டு பா.ஜ.க. கூட்டணி சார்பில் நிற்கின்றவர்தான் தினகரன்.
1995-96-ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து 62 இலட்சத்து 61 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அங்கீகாரம் அற்ற முகவர் மூல மாகப் பெற்று, இங்கிலாந்தில் இருக்கும் நிறு வனங்களுக்கு சட்டவிரோதமாகக் கொடுத்த தாக, அந்நியச் செலாவணி மோசடியில் சிக்கி யவர்தான் இந்த தினகரன். ‘ஃபெரா’ போன்ற சொற்களைத், தமிழ்நாட்டில் முதலில் அறி முகப்படுத்திய பெருமை தினகரனுக்குத்தான் உண்டு. இந்த வழக்கை 30 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டு இருக்கிறார். இந்த வழக்கில் அவருக்கு 28 கோடி ரூபாயை அமலாக்கத்துறை அபராதமாக விதித்தது. இப்போது புரிகிறதா! ஏன் இவர் பா.ஜ.க.வுக்குச் சென்றார் என்று!
அதுமட்டுமல்ல, அம்மையார் மறையும் வரை, போயஸ் கார்டனுக்குள் நுழைய முடி யாமல் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இருந் தவர் தினகரன். காரணம் என்ன? அம்மையார் சொத்துக் குவிப்பு வழக்கோடு தன்னுடைய வழக்கைச் சேர்த்தால், தனக்கும் தண்டனை கிடைத்துவிடும். அதனால் இரண்டு வழக்கை யும் தனியாக நடத்த வேண்டும் என்று அம்மை யார் ஜெயலலிதாவின் வக்கீலையே மிரட்டிய தால் விரட்டப்பட்டவர். கடைசியாக, ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, சசிகலாவால் கட்சிக்குள் சேர்க்கப்பட்ட தினகரன்தான், இப்போது வழக்கு களுக்கு பயந்து, சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து, மோடி வாஷிங் மெஷின் மூலமாகத் தேனிக்குள் நுழைந்து இருக்கிறார்.
இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகளைத் தோற்கடிக்க வேண்டும்! தேனி மக்களே ஏமாந்து விடாதீர்கள்! கடந்த முறை பன்னீர்செல்வம் மகனிடம் ஏமாந்துவிட்டீர்கள்! இந்த முறை, சசிகலா குடும்பத்திடம் ஏமாந்துவிடாதீர்கள்.
ஓ.பி.எஸ் நிலைமை என்ன? இரண்டு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த வரை - இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருப் பவரை அவமானப்படுத்த - அவரை மிரட்டி இராம நாதபுரத்தில் நிற்க வைத்திருக்கிறது பா.ஜ.க. தலைமை. தினகரனை மிரட்டித் தேனியில் நிற்க வைத்திருக்கிறார்கள்.
இப்படி, பா.ஜ.க.வின் தொங்கு சதைகளான பழனிசாமி – பன்னீர்செல்வம் - தினகரன் என்று யாராக இருந்தாலும், பா.ஜ.க.வுக்குக் கொடுக் கும் அதே தண்டனையைக் கொடுங்கள். பா.ஜ.க. வுக்கு சொந்த செல்வாக்கு இல்லாததால் பன்னீர் செல்வம் - தினகரன் போன்ற வாடகை மனிதர் களை வைத்து, தேர்தலைச் சந்திக்கிறது. ‘பி-டீம்’-ஆகப் பழனிசாமியின் அ.தி.மு.க.வைக் குத்தகைக்கு எடுத்து, தனியாக நிற்க வைத்திருக்கிறது. சொந்தமாக முடிவெடுக்க முடியாமல், கீ கொடுத்த பொம்மைபோல் அ.தி.மு.க.வை ஆட்டுவிக்கிறது பா.ஜ.க!
இவர்களை மொத்தமாகத் தோற்கடிக்க வேண்டாமா? தமிழுக்கும் – தமிழினத்திற்கும் - தமிழ்நாட்டிற்கும் வஞ்சகம் செய்யும் பா.ஜ.க. கூட்டத்திற்கும் - துரோகம் இழைக்கும் பழனிசாமி – பன்னீர்செல்வம் – தினகரன் - பா.ம.க. ஆகிய அடிமைக் கூட்டத்திற்கும், திண்டுக்கல், தேனி மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.