districts

img

ஆண்டிபட்டி-தேனி ரயில் பாதையில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

தேனி, மார்ச் 31- மதுரை-போடிநாயக்கனூர் அகல ரயில் பாதையில் ஆண்டி பட்டியில் இருந்து தேனி வரை உள்ள 17 கிலோமீட்டர் தூரம் நிறைவு பெற்ற ரயில்வே பணி களை மத்திய ரயில்வே பாது காப்பு ஆணையர் மனோஜ் அரோரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மணிக்கு 120  கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. மதுரை-போடிநாயக்கனூர் இடையே உள்ள 90.4 கிலோ மீட்டர் தூர மீட்டர் கேஜ் பாதை யை அகல ரயில் பாதையாக மாற் றும் வகையில் மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டம் 450 கோடி ரூபாய் செலவில் நடை பெற்று முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், வியாழ னன்று ஆண்டிபட்டியில் இருந்து தேனி வரை உள்ள அகல ரயில் பாதையில் மத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோஜ் அரோரா ஆய்வு மேற்கொண்டார். ஆண்டிபட்டி மற்றும் தேனி  ரயில் நிலையங்களில் தண்ட வாள பராமரிப்புகள், கணினி மற்றும் கட்டுப்பாட்டு அறைகள்,  சிக்னல், ரயில்வே கேட், பயணி களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல் வேறு அம்சங்கள் குறித்து அதி காரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் தேனி-ஆண்டிபட்டி இடையே மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக் கப்பட்டு சோதனை ஓட்டத்தை யும் வெற்றிகரமாக நடத்தினர். இதனால் மதுரை- போடி நாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டத்தில் முதல் கட்டமாக மது ரையிலிருந்து தேனி வரையி லான பயணிகள் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வில், ரயில்வே கட்டுமான பிரிவு முதன்மை செயல் அதிகாரி பிரபுல்ல வர்மா,  தலைமைப் பொறியாளர் இளம்பூரணன், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வரவேற்பு
போடி-மதுரை அகல ரயில் பாதை திட்ட அமலாக்ககுழு சார் பில் நிர்வாகிகள் எல். ஆர். சங்கர சுப்பு. கே. ராஜப்பன். பி. ராம மூர்த்தி. கே சீனிவாசன், விஜய குமார் உள்ளிட்டோர் அதிகாரி களுக்கு சால்வை அணிவித்து கெளரவித்தனர்.