தேனி, ஏப்.2- 200 தொகுதிகள் கூட பாஜகவுக்கு தேறாது என்ற உளவுத்துறை அறிக்கை யால் பிரதமர் மோடி கலக்கத்தில் உள் ளார்; மோடியின் சொந்த மாநிலத்திலேயே போட்டியிட பாஜகவினர் தயங்கி வரு கிறார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கூறினார் .
இந்தியா கூட்டணி சார்பில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ் செல்வனுக்கு வாக்குகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேனி அல்லிநகரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசிய தாவது;
கடந்த 2019 ஆம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் தேனி தொகுதி யில் மட்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி யில் உள்ள அதிமுக வெற்றி பெற்றது. அப்படி வெற்றி பெற்ற அதிமுக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதியின் வளர்ச்சிக்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், ஓ.பி.எஸ் அணி, டிடிவி தினகரன் அணி, சசிகலா அணி மட்டுமின்றி தீபா அணி என அதிமுக பல்வேறு அணிகளாக இருக் கிறது. நான் தான் ஒரிஜினல் அதிமுக என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார் .
யார் உங்கள் தலைவர்?
ஜெயலலிதாவை தலைவராக சொல்லி வரும் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வரை மோடியைத் தான் தனது தலைவர் எனக் கூறி வந்தார். அதிமுகவை அமித்ஷா தான் வழிநடத்தி வந்தார். எடப்பாடி பழனிச்சாமி அரசின் அமைச்சர் ஒருவர் மோடி எங்கள் டாடி என்றெல்லாம் பேசி னார். ஆனால் தற்போது மோடியை நாங்கள் எதிர்க்கிறோம் எனக் கூறி மக்க ளை ஏமாற்றி வருகிறார்கள்.தேனியில் போட்டியிடும் டிடிவி தினகரனும், அதிமுக வேட்பாளரும் வேறு, வேறு இல்லை. இருவரும் ஒன்று தான். இருவரும் மோடி யைத் தான் ஆதரிப்பார்கள் .
வரலாறு மன்னிக்காது
பாஜக கூட்டணி 200 இடங்களில் கூட வெற்றி பெறாது என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இந்திய அளவில் செல்வாக்கு குறைந்து வரும் பாஜக ஒரு மூழ்கும் கப்பல் போன்றது; அதனுடன் இருந்தால் நாமும் மூழ்கி விடுவோம் என எண்ணிய எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணி யில் இருந்து தற்போது வெளியேறியுள் ளார். ஒரு வேளை தப்பித்தால் மீண்டும் சேர்ந்து கொள்வார், மோடியும் அவரை சேர்த்துக் கொள்வார். மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோதச் சட்டங்களுக்கு ஆதரவாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்க ளிக்க வைத்தவர்கள் எடப்பாடி பழனிச் சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தான்.இவர்களை வரலாறு மன்னிக்காது.
சிறந்த வேட்பாளர்
நான் சட்டமன்ற உறுப்பினராக பணி யாற்றிய காலத்தில் தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார் .சட்டப்பேரவையில் ஆளும் கட்சி உறுப்பினர் என்பதையும் மீறி மக்களின் கோரிக்கைகளுக்காக தொட ர்ந்து குரல் எழுப்பினார். மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டால் தொடர்ந்து மக்க ளுக்காக சேவை செய்வார். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் இ .தர்மர் தலைமை வகித்தார். பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஏ.வி. அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் டி.வெங்கடேசன், சி.முருகன், எம்.ராமச்சந்திரன், டி.கண்ணன், கே.ஆர்.லெனின், கே.எஸ். ஆறுமுகம், சு.வெண்மணி, திமுக நகர் செயலாளர் நாராயண பாண்டி, தேனி நகர்மன்ற தலை வர் ரேனுப்பிரியா பாலமுருகன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் நகர்மன்ற தலைவர் முனியாண்டி, நகர் தலைவர் கோபிநாத் உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.