districts

img

கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா: பளியன்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது

தேனி, ஏப்.5- மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு கூட லூர் அருகே உள்ள பளியன்குடி ஆதிவாசி கள் குடியிருப்புப் பகுதியில், விழாவிற் கான கொடிமரம் ஊன்றும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழக-கேரள எல்லை பெரியாறு புலிகள் சரணாலயம் பகுதியில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் வரும் 16-ஆம் தேதி சித்திரை முழு நிலவு விழா, மங்கலதேவி கண்ணகி விழா, பூமாரி விழா என முப்பெரும் விழா நடை பெறுகிறது. கண்ணகி கோயிலுக்குச் செல்ல கேரள மாநிலமான குமுளியிலி ருந்து பாதுகாக்கப்பட்ட கேரள வனப் பாதை வழியாக ஜீப் செல்லும் வண்டிப் பாதையும், கூடலூர் அருகே உள்ள பளி யன்குடிலிருந்து தமிழக வனப்பகுதி வழி யாக 6.6 கிலோமீட்டர் நடைபாதையும் உள்ளது.  ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு பத்து நாட்களுக்கு முன்பாகவே பளியன்குடி ஆதிவாசி குடி யிருப்புப் பகுதியில் விழாவிற்கு கொடி மரம் நட்டு, கண்ணகி கொடி ஏற்றி பூஜை கள் செய்து பக்தர்கள் விரதம் இருந்து கண்ணகி கோயிலுக்குச் சென்று வரு வர். வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ள கண்ணகி கோயில் விழாவை முன்னிட்டு, பளியன் குடியில் கண்ணகி அறக்கட் டளை சார்பாக, கொடியேற்று விழா நடை பெற்றது. பச்சை மூங்கிலில் கொடிமரம் தயார் செய்து அதில் கண்ணகியின் உரு வம் பொறித்த மஞ்சள் கொடி ஏற்றப்பட் டது. கொடியேற்று விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பொங்கல் பிர சாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்  கம்பம் கண்ணகி அறக்கட்டளை செயலா ளர் ராஜ் கணேசன், பொருளாளர் முரு கன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நேரு, பஞ்சுராஜா மற்றும் கண்ணகி மகளிர் அணியினர் பளியன்குடி மக்கள் கலந்து கொண்டனர்.