தேனி, மார்ச் 31- போர்வெல் தொழிலுக்கு முக்கிய மூலப் பொருட்களான டீசல், ஆயில் மற்றும் உதிரி பாகங்களான பிட்ஹேமர், பிவிசி பைப் ஆகி யவற்றின் விலை தினமும் உயர்ந்து வரு கிறது. இதனால் தொழில் வெகுவாய் பாதிக் கப்பட்டுள்ளதாக கூறி தமிழ்நாடு ரிக் உரிமை யாளர் சம்மேளனம் சார்பில் தமிழகம் முழுவ தும் வேலைநிறுத்தப் போராட்டம் நடை பெற்றது. தேனியில் மாவட்ட ரிக் உரிமையாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத் திற்கு தலைவர் ஆர்பி.குருசாமி தலைமை வகித்தார். செயலாளர் பூண்டி ஆரோக்கிய குமார், துணைச் செயலாளர் ஆர்.சிவ மூர்த்தி, பொருளாளர் ஆர்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், குறைந்தது ரூ.2 கோடி முதலீடு செய்ய வேண்டியதுள்ளது. தற்போது ஒரு அடிக்கு ரூ.75 கட்டணம் பெறுகிறோம். விலைவாசி உயர்வினால் இத்தொகை கட்டுப்படியாக வில்லை. எனவே, ரூ.15 முதல் ரூ.20 வரை கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதி வரை போராட் டம் நடைபெறும் என்றனர்.