தேனி, ஜூன் 20- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் தேனி மாவட்ட 8 ஆவது மாநாடு கம்பத்தில் ஞாயிறன்று நடைபெற்றது.மாநாட்டிற்கு மாவட்டத்தலை வர் இதயநிலவன்,மாவட்டத் துணைத்தலைவர் ந.சேது ராம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ம.காமுத்துரை ஆகியோர் தலைமை வகித்த னர். எழுத்தாளர் அல்லி உத யன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.கம்பம் கிளைச் செயலாளர் பூமணம் ராஜா வரவேற்றுப் பேசினார்.மாநி லத் துணைச்செயலாளர் க. வேலாயுதம் துவக்கி வைத்து பேசினார்.அமைப்பு மற்றும் வேலை அறிக்கையை மாவட் டச் செயலாளர் அய்.தமிழ் மணி, இலக்கிய அறிக்கை யை மாவட்ட துணைச்செய லாளர் யாழ்தண்விகா, பண் பாட்டு அறிக்கையை மாநி லக்குழு உறுப்பினர் ப. மோகன் குமாரமங்கலம் ஆகி யோர் சமர்ப்பித்தனர். மாநாட் டினை வாழ்த்தி மாநிலச்செயற் குழு உறுப்பினர் கரிசல் கரு ணாநிதி பேசினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் மணி மாறன் நிறைவுரையாற்றினார். மாநாட்டில் மாவட்ட தலைவராக இதயநிலவன், செயலாளராக அய்.தமிழ் மணி, பொருளாளராக விஜ யராஜ் காந்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவர்களாக கே.எஸ்.கே. நடேசன், பூர்ணிமா கன நாதன், துணைச்செயலா ளர்களாக கடமலை அழகர் சாமி, மஞ்சில் செல்வி உள் ளிட்ட 40 பேர் கொண்ட மாவட் டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மேகமலை வன உயிரி யல் சரணாலயம் என்ற திட் டத்தைக் காரணம் காட்டி தேனி மாவட்டம் கட மலைக்குண்டு மயிலாடும் பாறை வட்டாரத்தில் உள்ள 70 கிராமங்களில் வாழும் மக் களை வெளியேற்றும் முயற் சியை கைவிட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு களின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களி லும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான உள்ளகப் புகார் குழு ஏற் படுத்தப்பட வேண்டும். குழு ஏற்படுத்தப்பட்ட இடங்களி லும் வெறும் பெயருக்குச் செயல்படாமல், முறையாகச் செயல்படவும், புகார் செய் யும் பெண்களுக்குப் பாது காப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.