districts

ஜிஎஸ்டி வரிவிதிப்பை எளிமைப்படுத்தும் கட்சிக்கே தேர்தலில் ஆதரவு

தேனி,மார்ச் 6-  ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை முறைப் படுத்தி,  எளிமைப்படுத்த வேண்டும்  என்பன உள்ளிட்ட வணிகர் சங்கங் களின் பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்றும் அரசியல் கட்சிகளுக்குத்தான் வரும் மக்களவைத் தேர்தலில் ஆதரவு என்று தேனியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திண்டுக்கல்  மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாயன்று தேனி பழனிசெட்டிபட்டி யில் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா பங்கேற்றார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்த அவர் கூறுகையில்,  மே-5 ஆம்  தேதி மதுரையில் நடைபெறும் தமிழ்நாடு  வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 41வது மாநில மாநாட்டில் திண்டுக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இருந்து சுமார்  25 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். 

அந்த மாநாட்டில் ஊராட்சி, பேரூ ராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகிய பகுதிகளில் நிலவும் வாடகை, வரிப் பிரச்சனைகளை சீரமைக்க அரசி டம் வலியுறுத்த இருக்கிறோம். வணிக வரித்துறை மூலம் ஜி.எஸ்.டியால்  வணிகர்கள் நசுக்கப்படுவதை தவிர்க்க ஜி.எஸ்.டியை தடை செய்ய முதலமைச்சர்  உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும். இல்லையென்றால் ஒன்றிய, மாநில அரசுகளைக் கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து மாநில மாநாட்டில் தேதி அறிவிக்கப்படும்.

 மேலும் பாஜக தேசியத் தலைவர் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலை வர்கள் வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால்  ஜிஎஸ்டி வரி விதிப்பை எளிமை ப்படுத்தி முறைப்படுத்த வேண்டும்,  உணவு பாதுகாப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரும்போது வணிகர் பேர வை நிர்வாகிகளை அழைத்து ஆலோச னை பெற்று முறைப்படுத்த வேண்டும், வணிகர்களை பாதுகாக்க சிறப்புச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட வணிகர்களின்  கோரிக்கை களை நிறைவேற்றித் தருவதாக வாக்கு றுதியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் தெரிவிக்கும் அரசியல் கட்சிகளுக்கு வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு அளிக்கும்.

 இவ்வாறு அவர் தெரிவித்தார்.