தேனி, பிப்.20- தேனியில் மகனின் உயி ரிழப்புக்கு நீதி கேட்டு தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியால் பெரும் பர பரப்பு ஏற்பட்டது . வீரபாண்டி அருகே உள்ள உப்புக்கோட்டை கிரா மத்தைச் சேர்ந்தவர் கண் ணன் (40). வெல்டிங் வேலை செய்யும் கூலித்தொழிலாளி யான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் அதே பகுதியில் வேலைக்கு சென்ற இடத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந் தார். இது தொடர்பாக வீர பாண்டி காவல்நிலையத்தில் வழக்குப் பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கண்ண னின் உயிரிழப்புக்கு உரிய நீதி கோரி அவரது தாயார் சுருளியம்மாள் (65), மனைவி புவனேஸ்வரி (34) மற்றும் 3 பேரக்குழந்தைகளு டன் ஆட்சியர் அலுவலகம் முன்பாக பிப்ரவரி 20 அன்று மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடு பட்டார். அங்கிருந்த போலீ சார் துரிதமாக செயல்பட்டு அவர்களை தடுத்து நிறுத்தி உடலில் தண்ணீர் ஊற்றிய தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதை யடுத்து 3குழந்தைகள் மற்றும் புவனேஸ்வரி, சுருளி யம்மாள் ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச் சைக்காக தேனி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.