districts

ஆண்டிபட்டி உள்ளிட்ட 11 பேரூராட்சிகளுக்கு எல்.இ.டி பல்புகள் வாங்கியதில் ரூ.1 கோடி ஊழல் பேரூராட்சி துணை இயக்குநர் -11 செயல் அலுவலர்கள் மீது வழக்கு பதிவு

தேனி, ஜூன் 15- தேனி மாவட்டத்தில் ஆண்டி பட்டி உள்ளிட்ட 11 பேரூராட்சி களுக்கு எல்.இ.டி பல்புகள் வாங்கி யதில் ரூ. 1 கோடிக்கும் மேல்  மோசடி நடைபெற்றதாக அப் போது பணியில் இருந்த பேரூ ராட்சிகள் துணை இயக்குநர் மற்  றும் 11 பேரூராட்சி செயல் அலுவ லர்கள், 2 ஒப்பந்ததாரர்கள் ஆகி யோர் மீது தேனி லஞ்ச ஒழிப்பு  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  தேனி மாவட்டத்தில் ஆண்டி பட்டி, தென்கரை, வீரபாண்டி, கே.புதுப்பட்டி, உத்தமபாளை யம், கோம்பை, மேலசொக்க நாதபுரம், பூதிப்புரம், தேவ தானப்பட்டி, ஒடைப்பட்டி ஆகிய பேரூராட்சிகளுக்கு 2019-2020- ஆம் நிதியாண்டில் 1300 எல்.இ.டி பல்புகள் வாங்கப்பட்டுள்ளன. ஒரு எல்.இ.டி பல்பு 9987 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பல்பின் விலை 1200 முதல் அதிகபட்சம் 2500 ரூபாய் மட்டுமே இருக்கும். ஆனால் 7487 ரூபாய்க்கு கூடுத லாக கணக்கு காட்டி ஒரு கோடி யே 29 லட்சத்து, 83 ஆயிரத்து 100 மோசடி நடந்துள்ளதாக கூறப்  படுகிறது. இதில் தொடர்பாக தேனி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அப்போதைய பேரூராட்சி உதவி இயக்குநர் விஜயலட்சுமி, அப்போதைய பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆண்டிபட்டி பாலசுப்பிரமணியன், தென்கரை மகேஸ்வரன், வீரபாண்டி செந் தில்குமார், கே.புதுப்பட்டி ஆண்டவர், உத்தமபாளையம் பாலசுப்பிரமணி, கோம்பை  ஜெயலட்சுமி, மேலசொக்கநாத புரம் மணிகண்டன், பூதிப்புரம் கார்த்திகேயன், தேவதானப்பட்டி கணேசன், ஒடைப்பட்டி பசீர் அக மது ஆகிய 11 பேர் மீதும், கே. புதுப்பட்டியைச் சேர்ந்த ஒப்பந்த தாரர்கள் ஜமுனா, ரவி ஆகிய 14  பேர்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.