districts

img

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி, ஜூன் 11- தேனி விடைத்தாள் திருத்தும் மையத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரி யர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து  செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு உதவி  பெறும் பள்ளிகளில் 2019 ஆம் ஆண்டு  களுக்கு முன்பு அரசு ஒப்புதலுடன் பணி யமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி  வரன்முறை செய்ய வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தி.துரைப்பாண்டியன் தலைமை வகித்தார். மாநில பொருளா ளர் பொ.அன்பழகன் சிறப்புரையாற்றி னார். மாநிலத் துணைத்தலைவர் சு. முருக பூபதி, மாவட்டச் செயலாளர் பெ. கெளதம் அசோக்குமார், மாவட்ட பொரு ளாளர் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரம்
இராமநாதபுரம், செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முதுநிலைப் பட்ட தாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமை வகித்தார். மாநில  தலைமையிட செயலாளர் இராவணன் விளக்கிப் பேசினார். மாவட்ட செயலா ளர் ஜீவானந்தம் மற்றும் 100க்கும் மேற்  பட்ட முதுகலை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.