தேனி, ஜூன் 14- தமிழக அரசின் தகவல் ஆணைய விருது பெற்ற போடி வாலிபருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது. போடி அருகே மேலச்சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு பொது தகவல்களை கேட்டும், மனுக்கள் அனுப்பி வருகிறார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்கள் அனுப்புவதோடு மட்டுமின்றி பொதுமக்க ளின் குறைகளை தீர்க்க நடவடிக்கைகளை எடுத்து வரு கிறார். ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட சில அரசு அலுவலகங்களில் கழிப்பறைகள் சுத்தம் செய்யா ததை சுட்டிக் காட்டியதுடன், சுத்தம் செய்ய ரூ.1000 தனது சொந்த பணத்தில் அனுப்பி வைத்தார். தகவல் அறியும் சட்டம் குறித்த விழிப்புணர்வையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தியும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்கள் அனுப்புவதற்கான பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார். சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு மாநில தலைமை தக வல் ஆணையர் ராஜகோபால் ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு சான்றும், கேடயமும் வழங்கி பாராட்டினார். ராமகிருஷ்ணனை தேனி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு சமூக நல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பாராட்டி வருகின்றனர்.