தேனி, ஏப்.10- தேனி உழவர் சந்தையில் தேனி மக்களவை தொகுதி திமுக வேட்பா ளர் தங்க.தமிழ்ச்செல்வனுக்கு ஆத ரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். தேனியில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ப தற்கு முன்பாக, காலை 8 மணிக்கு தேனி விளையாட்டுத் திடலில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டி ருந்த இளைஞர்கள் மற்றும் மாண வர்களுடன் கலந்துரையாடி, அங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், உழவர் சந்தைக்குச் சென்று வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோருடன் கலந்துரையாடினார். முதலமைச்சர் நிலையிலிருந்தா லும், மிகவும் எளிமையான முறை யில் பொதுமக்களை நேரில் வந்து சந்தித்ததை எண்ணி மகிழ்ந்த அவர்கள், வழங்கிய புத்தகங்கள், பூங்கொத்துகள், சால்வைகள் ஆகி யவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். அங்கு பெற்றோர்களுடன் காய்கறி வாங்கிட வருகைதந்த சிறுவர், சிறுமியர்களிடம் படிப்பு குறித்தும் முதலமைச்சர் கேட்ட றிந்தார்.
பின்னர், குழந்தைகள், முதல்வருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அங்கிருந்த தேநீர் கடையில், மக்களோடு மக்களாக அமர்ந்து தேநீர் அருந்தினார். அங்கு திரளாக கூடிய பொதுமக்கள் அரசின் திட்டங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் ஆகியவை பெரிதும் பயன் தருவதாக தெரிவித்தனர்.
குறிப்பாக வியாபாரத்தில் ஈடு பட்டுள்ள உழவர்களும், பெண் களும் தங்களின் விளைபொருட் களை கட்டணமில்லாமல் அரசுப் பேருந்துகளில் கொண்டு வந்து உழவர் சந்தையில் வியாபாரம் செய்வதன் மூலம் வருவாய் ஈட்டு வதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்து, எங்களது வாழ்நாளில், தங்களு டன் செல்பேசி மூலம் புகைப்படம் எடுத்துக் கொள்வது மிகப்பெரிய பாக்கியம் என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தனர்.
அங்கு பெருந்திரளாக கூடி யிருந்த அனைவரிடம் இந்த அரசினால் செயல்படுத்தப்படும் அனைத்து மக்கள் நலத் திட்டங் களும் தொடர்ந்து செயல்படுத்திட உங்கள் அனைவரின் நல் ஆதர வினையும், தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
நிகழ்வின் போது, அமைச்சர் ஐ.பெரியசாமி, மாவட்டச் செயலாள ரும், சட்டமன்ற உறுப்பினருமான கம்பம் ராமகிருஷ்ணன், திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ. மகாராஜன், கே.எஸ்.சர வணக்குமார், முன்னாள் மாவட்டச் செயலாளர் மூக்கையா ஆகியோர் உடன் இருந்தனர்.