கடமலைக்குண்டு, டிச.31- தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே நரியூத்து ஊராட்சிக்குட்பட்ட பின்ன தேவன் பட்டி கிராமம் செல்லும் சாலையின் குறுக்கே பெரிய ஓடை அமைந்துள்ளது. இந்த ஓடையின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் உப்புத்துறை கருப்பை யாபுரம் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பெரிய ஓடையில் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீர் வரத்து உள்ளது. இதனால் தரைப்பாலம் முழுவதும் பாசிகள் வளர்ந்து காணப்படு கிறது. எனவே தரைப்பாலம் வழியாக செல்லும் பைக், ஆட்டோ,ஜீப், உள்ளிட்ட வாகனங்கள் பாசிகளால் வழுக்கப்பட்டு நிலைதடுமாறி விபத்தில் சிக்கி வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அதிக அளவு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. பின்னத் தவன்பட்டி கிராமத்தை கடந்து உப்புத் துறை, ஆட்டுப்பாறை, ஆத்துக்காடு, கருப் பையாபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த கிரா மங்களுக்கு அதிக அளவில் பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். தற் போது தரைப்பாலத்தில் பாசிகள் வளர்ந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ள தால் வெளியூர் செல்லும் பொதுமக்கள் மாற்றுப் பாதைகள் வழியாக பல கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை உள்ளது. பெரிய அளவிலான விபத்துக்கள் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுத்து தரைப்பாலத்தில் வளர்ந் துள்ள பாசிகளை அகற்ற வேண்டும். மேலும் தரைப்பாலத்தை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் புதிய மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.