districts

img

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக இன்பச்சுற்றுலா  

தேனி, பிப்.25- தேனியில் காதுகேளாதோர் மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கான இன்பச் சுற்றுலாவை மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனா துவக்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல் பட்டு வரும் மனவளர்ச்சி குன்றியோருக்கான ஆரம்ப கால  பயிற்சி பெற்று வரும் மூன்று வயது முதல் ஆறு வயது  வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மற்றும்  காதுகேளாதோர் ஆரம்ப கால பயிற்சி மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள், அவர்தம் பெற்றோர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் என 51 பேர் சுற்றுலாத்துறையின் சார்பில் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் வைகை அணை, பென்னிகுவிக் மண்டபம் ஆகியவற்றை ஆர்  வத்துடன் சுற்றிப்பார்த்தனர். இவர்களுக்கான போக்கு வரத்து கட்டணம், நுழைவுக்கட்டணம், சிற்றுண்டி மற்றும்  மதிய உணவு ஆகியவை வழங்கி ஏற்பாடுகள் செய் யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலு வலர் த.சீனிவாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.ஜெகவீரபாண்டியன், மாவட்ட சுற்றுலா அலுவலர் பாஸ்கரன் உட்பட பங்கேற்றிருந்தனர்.