districts

லோயர் கேம்பில் 36 மெகாவாட் மின் உற்பத்தி

தேனி, ஜூன் 6- பருவமழை மற்றும் கோடை மழை கைகொடுத்ததால் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் சீராக உயர்ந்தது. இத னால் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி நெல் சாகுபடி பாசனத்துக்காக 1-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.  இதே போல் வைகை அணையிலும் மதுரை, திண்டுக்கல் மாவட்டப் பாசனத் துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது மழை குறைந்துள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. இருந்தபோதும் தண்ணீர் திறப்பு ஞாயிறு முதல் அதிகரிக்கப்பட்டது. 136 கன அடி நீர் வருகிற நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணை யின் நீர்மட்டம் 132.05 அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 61.25 அடி யாக உள்ளது. வரத்து இல்லை. அணை யில் இருந்து பாசனம் மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 669 கன அடி நீர் திறக்கப்படுகிறது.  மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. 75 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 89.38 அடி. வரத்து இல்லாத நிலையில் 6 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணை 10.2, சோத்துப்பாறை 0.5 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவைப் பொறுத்து லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் நான்கு ஜெனரேட்டர்களை கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 300 கன அடி நீர் திறக்கப்பட்ட போது 1 ஜெனரேட்டர் மூலம் 27 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. ஞாயி றன்று நீர் திறப்பு 400 கன அடியாக அதி கரிக்கப்பட்டதால் மின் உற்பத்தியும்  36 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.