districts

தேனி அருகே 3 விபத்துகளில்  பெண் உட்பட 3 பேர் பலி  

தேனி, மார்ச்.4- தேனி அருகே உப்பார்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (50). இவர் தனது மனைவி பாண்டியம்மாளுடன் பைக்கில் பெரியகுளத்தில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு வெள்ளிக்கிழமை  சென்று விட்டு புறவழிச்சாலையில்  ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். தேனி அருகே ஆதிபட்டி புறவழிச்சாலை மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்து கொண்டிருந்த கார் , இவர்கள் மீது மோதியது.இதில் அதே இடத்தில் முருகேசன் உயிரிழந்தார். பாண்டி யம்மாள் காயங்களுடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார் . சின்னமனூரில் பொன் நகரை சேர்ந்த லட்சுமி பிரியா தனது தாய் ஆர்த்திகனியுடன் காய்கறி வாங்கி விட்டு பேருந்து நிலையம் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தனர்  .அப்போது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வேகமாக வந்த புல்லட் ஆர்த்திகனி மீது மோதி  விபத்துக்குள்ளானது .படுகாயமடைந்து தேனி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் .விபத்து குறித்து சின்னமனூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் . வடபுதுப்பட்டி அருகே அன்னஞ்சி விலக்கு பகுதியை சேர்ந்தவர் காந்தி .இவர் தனியார் மில்லில் காவலாளியாக பணிபுரித்து வந்தார் .இரு சக்கர வாகனத்தில் பெரியகுளத்திற்கு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வர் வாகனத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார் . படுகாயத்துடன் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்தார் .விபத்து குறித்து தென்கரை காவல்நிலை யத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .