தென்காசி, ஜுன் 4- தென்காசி (தனி) நாடாளு மன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய இயந்தி ரங்கள் கொடிக்குறிச்சி யு.எஸ்.பி. கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப் பட்டு வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு துவங்கியது.
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் டாக்டர் ராணிஸ்ரீ குமார், அதிமுக கூட்டணி சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி, பாஜக சார்பில் ஜான் பாண்டியன் உள்ளிட்ட 14 வேட்பாளர்கள் போட்டியிட்ட னர்.
24 வது சுற்றின் முடிவில் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் திமுக- 4 லட்சத்து 22 ஆயிரத்து 425 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து டாக்டர் கிரு ஷ்ணசாமி அதிமுக ,2,27,892 வாக்குகளும் ஜான் பாண்டியன் பாஜக 2,06,522 வாக்குகளும் , இசை மதிவாணன் நாதக 1,28,573 வாக்குகளும் பெற்றனர்.
திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் தனக்கு அடுத்த படியாக வந்த அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ண சாமியை விட 1,94,533வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.