தென்காசி, ஜூன் 28 - அநியாயமாக உயர்த்திய சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலிமனை தர வரியை குறைத்திட கோரி சிஐடியு பீடித் தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுத்து முறையிடும் போராட்டம் சுரண்டை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. சங்க சுரண்டை வட்டாரத் தலைவர் பொட்டு செல்வம் தலைமை தாங்கினார். சுரண்டை கிளை துணை செயலாளர் லலிதா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து சிஐடியி தென்காசி மாவட்ட செயலாளர் எம்.வேல்முருகன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் பீடி சங்க மாவட்ட நிர்வாகிகள் கண்டன உரை யாற்றினர். பீடித் தொழிலாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சுந்தர மூர்த்தி நயினார் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.