districts

img

தூத்துக்குடியில் விறுவிறு வாக்குப்பதிவு

தூத்துக்குடி, பிப்.19 தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு சனியன்று காலை 7 மணிக்குத் துவங்கி விறு விறுப்பாக நடைபெற்றது.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சி யில் உள்ள 60 வார்டுகள், கோவில் பட்டி, திருச்செந்தூர், காயல்பட்டி னம் ஆகிய 3 நகராட்சிகளில் உள்ள 81 வார்டுகள், கடம்பூர் தவிர 17 பேரூராட்சிகளில் உள்ள 255 வார்டுகள் ஆக மொத்தம் 396 வார்டு உறுப்பினர் பதவிகளுக் கான தேர்தவில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வரு கின்றனர். 20வது வார்டில் சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச் சர் கீதாஜீவன் தன்னுடைய குடும் பத்தினருடன் வந்து வாக்களித் தார். தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் கால்டுவெல் பள்ளி யில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 20வது வார்டு திமுக வேட்பாளர் ஜெகன் பெரியசாமி தனது வாக்கை பதிவு செய்தார்.  இந்த தேர்தலில் மொத்தம் 6 லட்சத்து 51 ஆயிரத்து 693 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 750 வாக் குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. பதற்றம் நிறைந்ததாக கண்டறியப்பட்ட 174 வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமரா, வெப் கேமரா பொருத்தப் பட்டு உள்ளது. 211 நுண்பார்வை யாளர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. . வாக்குச்சாவடிகளில் பாது காப்பு ஏற்பாடுகளை எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.