districts

img

தூத்துக்குடி மக்களுக்கு நிவாரணம்

கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில்  48,763 கிலோ உணவுப் பொருட்கள்  விநியோகிக்கப்பட்டுள்ளன. மதுரை விமான நிலையத்தில் இருந்து வெள்ளியன்று ஹெலிகாப்டர் மூலம் அனுப்பப்பட்ட பொருட்களை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பார்வையிட்டார்.  மாவட்ட ஆட்சியர்  எம்.எஸ்.சங்கீதா, மதுரை வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி ஆகியோரும் பார்வையிட்டனர். மதுரை விமான நிலைய இயக்குநர் பி.முத்து குமார் மற்றும் ஷியாம் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.