தூத்துக்குடி. ஏப். 8 - தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2020-21 ஆம் ஆண்டில் உளுந்து பயிரில் காப்பீடு செய்தி ருந்த விவசாயிகளுக்கு ரூ.85.219 கோடி இழப்பீடுத் தொகை விடு விக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சி யர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2020-21 ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ராபி பரு வத்தில் உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம், சோளம், கம்பு ,பருத்தி, சூரியகாந்தி, எள், நிலக் கடலை மற்றும் நெல் பயிர்களுக்கு 139206 எக்டருக்கு விவசாயிகள் காப்பீடு பதிவு செய்திருந்தனர். இதில் மக்காச்சோளம் (45437 எக்டரிலும்) மற்றும் உளுந்து (54897 எக்டரிலும்) பயிர்கள் 100 034 எக்டர் பரப்பிற்கும் மீதமுள்ள பயிர்கள் அனைத்தும் சேர்த்து 39 173 எக்டரிலும் காப்பீடு பதிவு செய் யப்பட்டது. பருவம் தவறிய மழை யினால் பயிர்கள் பாதிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சி யர் கி.செந்தில்ராஜ் மற்றும் வேளாண்மைத் துறையின் சீரிய நடவடிக்கைகள் காரணமாக உளுந்து பயிருக்கு ரூ.85.219 கோடி இஃப்கோ டோக்யோ (IFFCO TOKIO) காப்பீட்டு நிறுவனத்தால் 95852 பதிவுகளுக்கு விடுவிக் கப்பட்டுள்ளது. இத்தொகை நேரடி யாக விவசாயிகளின் வங்கி கணக் கில் வரவு வைக்கப்படுகிறது.
இன்னும் ஓரிரு நாட்களில் தகுதியுடைய அனைத்து விவசாயி களின் வங்கி கணக்கிற்கும் உரிய தொகை சென்றடையும். ஓட்டப்பி டாரம் வட்டாரத்திற்கு 31825 பதிவு களுக்கு ரூ,29.974 கோடி, கயத்தார் வட்டாரத்திற்கு 22270 பதிவு களுக்கு ரூ.24.131 கோடி, கோவில் பட்டி வட்டாரத்திற்கு 14240 பதிவு களுக்கு ரூ.12.261 கோடி, விளாத்தி குளம் வட்டாரத்திற்கு 14062 பதிவு களுக்கு ரூ.11.749 கோடி, கருங்குளம் வட்டாரத்திற்கு 4355 பதிவு களுக்கு ரூ.3.872 கோடி, புதூர் வட்டாரத்திற்கு 7786 பதிவுகளுக்கு ரூ.1.953 கோடி மற்றும் தூத்துக் குடி வட்டாரத்திற்கு 1314 பதிவு களுக்கு ரூ.1.279 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 95852 பதிவு களுக்கு ரூ.85.219 கோடி விடுவிக்கப் பட்டுள்ளது. இத்தொகை இப்பருவத்தில் தமிழகத்தில் எந்த ஒரு மாவட்டத் திற்கும் விடுவிக்கப்பட்ட தொகை யைக் காட்டிலும் மிக அதிகமாகும். ஏற்கனவே விடுவிக்கப்பட்ட மக்காச் சோளம் பயிருக்கான காப்பீட்டுத் தொகை ரூ.20.45 கோடியுடன் உளுந்து பயிருக்கான காப்பீட்டுத் தொகை ரூ.85.22 கோடி சேர்த்து தூத்துக்குடி மாவட்ட விவசாயி களுக்கு இதுவரை 105.67 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.