தூத்துக்குடி, பிப்.22- தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி போராட் டம் நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி னர். இந்த அதிர்ச்சிகரமான சம்ப வத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக விசாரிப்பதற்காக நீதிபதி அருணா ஜெகதீசன் தலை மையில் ஆணையம் அமைக்கப் பட்டது. ஆணையம் 4 ஆண்டுகள் விசா ரணை நடத்தி கடந்த 2022ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித் தது. அந்த விசாரணை அறிக்கை யில், இந்த சம்பவத்திற்கு 17 காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்பட வருவாய் துறையினர் ஆகி யோர்தான் காரணம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டி ருந்தது.
அதன் அடிப்படையில், 17 காவல்துறையினர், மாவட்ட ஆட்சி யர் உள்பட வருவாய் துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீட்டை அதிகரித்து தர வேண் டும் என அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்திருந்தது.
ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட அரசு, அதிகாரி களுக்கு எதிராக ஒழுங்கு நடவ டிக்கை மட்டும் எடுப்பது எனவும் ஏற்கெனவே வழங்கப்பட்ட தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடே போது மானது என கூறி கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. ஸ்னோலினின் தாய் பொது நல வழக்கு இந்த அரசாணையை எதிர்த்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 17 வயது சிறுமி ஸ்னோலி னின் தாய் வனிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் நீதிபதி அருணா ஜெக தீசன் ஆணையம் பரிந்துரைத்தபடி காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என குற்றம் சாட்டியிருந்தார். எனவே, காவல்துறையினர், வருவாய் துறையினர் மீது கொலை வழக்கு பதியவும், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் அர சுக்கு உத்தரவிட வேண்டும்” என வும் கோரியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதி பதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித் தது. அப்போது, துப்பாக்கிச்சூடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது என்று தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. தமிழக அரசின் விளக்கத்தை அடுத்து விசாரணை யை ஏப்ரல் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
திருத்தம்
நேற்றைய (22-2-2024) இதழின் முதல் பக்கத்தில் வெளியான இளங்கம்யூனிஸ்ட்டுகளின் சிவப்பு புத்தக வாசிப்பு பற்றிய படக்குறிப்பில், ‘கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்ட தினத்தை (1848 பிப்.21)’ என்று
வந்திருக்க வேண்டும். தவறுக்கு வருந்துகிறோம்.
-ஆசிரியர்