districts

img

தூத்துக்குடி வெளித் துறைமுகத் திட்டத்தை 10 ஆண்டுகள் கிடப்பில் போட்ட பாஜக அரசு

தூத்துக்குடி, பிப். 28 - 10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான முற்போக்கு கூட்டணி அரசு முன்மொழிந்து நிதி ஒதுக்கீடு செய்த தூத்துக்குடி வெளித் துறைமுக  திட்டத்தை, தமது ஆட்சிக்காலம் முழு வதும் கிடப்பில் போட்டுவிட்டு, ஆட்சி முடியும் தருவாயில் தற்போது தனது புதிய திட்டம் போன்று அடிக்கல் நாட்டி மாய்மாலம் செய்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. 

தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் புதனன்று நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ரூ.17,300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் நாட்டிற்கு அர்ப்பணித்தும் உரையாற்றி னார். இந்தத் திட்டங்களில் முதன்மை யானது, வ.உ.சிதம்பரனார் துறை முகத்தில் “வெளித் துறைமுக கொள் கலன் முனையம்” (Outer Harbor Con tainer Terminal) அமைப்பது ஆகும். 

மோடி பேசியது என்ன?
இத்திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர் தனது உரையின் போது, தூத்துக் குடி துறைமுகத்தில் வெளித் துறை முக கொள்கலன் முனையத்தை அமைப் பது உள்ளிட்ட பல விரிவாக்கத் திட்டங் களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  தான் வந்த போது உறுதியளித்ததாகவும், அந்த உறுதிமொழியை தற்போது நிறை வேற்றியிருப்பதாகவும் கூறினார். குறிப் பாக வெளித் துறைமுக கொள்கலன் முனையத்திற்கு தற்போது அடிக்கல் நாட்டி, அத்திட்டத்திற்காக ரூ.7 ஆயிரம் கோடி முதலீடு செய்வதாகவும் தெரி வித்தார். இது தவிர, பல்வேறு விரி வாக்கத் திட்டங்களுக்கு ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும்; தூத்துக்குடி உள்பட நாட்டின் 13 பெரிய துறைமுகங்களில் நடைபெற உள்ள பல்வேறு விரிவாக்கத் திட்டப் பணிகளுக் காக ரூ.2500 கோடி ஒதுக்கீடு செய்திருப்ப தாகவும் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியின் உரை, தூத்துக் குடி வெளித் துறைமுகத் திட்டம் முற்றிலும் புத்தம் புதியது போலவும், தனது ஆட்சியின் சாதனை போலவும் அமைந்திருந்தது. ஆனால் உண்மை முற்றிலும் வேறானது.

தூத்துக்குடி துறைமுகத்தின் நிலை
நாட்டில் உள்ள 13 பெரிய துறை முகங்களில் முக்கியமானது தூத்துக்குடி துறைமுகம். இத்துறைமுகம் வங்கக் கடலில் அமைந்துள்ள முதல் துறை முகம். இந்தியாவுக்கும் பிற நாடு களுக்குமான கப்பல் வணிகப்  போக்கு வரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பங்கினை தூத்துக்குடி துறைமுகம் ஆற்றி வருகிறது. ஆனால் இந்தத் துறை முகத்தில் நீண்டகாலமாக ஒரு பிரச்சனை உள்ளது. அது என்னவெனில், தூத்துக் குடி துறைமுகத்தின் வெளி கடற்பகு தியில் ஆழம் குறைவு என்பதால், மிகப் பெரும் தாய்க்கப்பல்கள் (Mother Vessels) உள்ளே வந்து நங்கூரமிட முடியாத நிலை உள்ளது.

இதன் காரணமாக தூத்துக்குடி துறைமுகம் வழியாக நடைபெற வேண்டிய சரக்குப் போக்குவரத்துக்காக வரும் மிகப்பெரும் தாய்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திலேயே நங்கூர மிடுகின்றன. அங்கிருந்து “பீடர் வெஸ்ஸல்” எனப்படும் (பெரும் கப்பல்களிலிருந்து சிறிய கப்பல்களுக்கு கண்டெய்னர்கள் மற்றும் சரக்குகளை ஏற்ற பயன்படுத்தப்படும்) கப்பல்களில் கண்டெய்னர்கள் மற்றும் சரக்குகள் ஏற்றப்பட்டு தூத்துக்குடி துறை முகத்திற்கு கொண்டுவரப்படுகின்றன. 

எனவே தூத்துக்குடி துறைமுகம், இதுவரையிலும் மிகப்பெருமளவிலான சரக்குகளை ஏற்றி இறக்குகிற - இந்தியா மற்றும் பிற நாடுகளின் துறைமுகங்களுக்கு சரக்குகளை ஏற்றி இறக்குகிற ஒரு “சரக்கு பரிமாற்ற முனையமாக” (Transshipment Hub) மாற முடியவில்லை. கொழும்பு துறை முகமே அப்படிப்பட்ட சரக்கு பரிமாற்ற முனையமாக செயல்பட்டு வருகிறது.

மேலும், இந்தியாவின் மேற்கு கட லோரத்தில் (அரபிக்கடல்) சமீபத்தில் விழிஞ்ஞம் துறைமுகம், புதிதாக உருவாக்கப்பட்டு, வெளி துறைமுக கொள்கலன் முனையமாக மாற்றப் பட்டுள்ளது. மேற்கு கடலோரத்தில் விழிஞ்ஞம், கொச்சி வல்லார்படம் மும்பை, குஜராத்தின் கண்ட்லா துறை முகம் ஆகியவை சரக்கு பரிமாற்ற முனையமாக செயல்படு கின்றன. 

ஆனால் கிழக்கு கடலோரத்தில் தூத்துக்குடிக்கு அந்த வாய்ப்பு இதுவரை ஏற்படாமல் உள்ளது. சென்னை, கொல்கத்தா ஆகிய துறைமுகங்களும் அப்படி இல்லை.

இந்தப் பின்னணியில்தான் தூத்துக் குடியில் வெளித்துறைமுக கொள்கலன் முனையம் அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழ்நாட்டின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இந்தக் கோரிக்கையையும் உள்ளடக்கி  ஒரு  பிரம்மாண்ட திட்டமாக முன்வைக்கப் பட்டது தான் சேது சமுத்திரத் திட்டம் என்பதும் நினைவு கூரத்தக்கது.

ஐமுகூ அரசு அறிமுகம்  செய்தத் திட்டம் 
இந்த நிலையில்தான் 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பட்ஜெட்டில் தூத்துக்குடி வெளித்துறை முக திட்டம் நான்கு கட்டங்களாக நிறை வேற்றப்படும் என்று, அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தால் அறி விக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2014  ஜனவரியில், தூத்துக்குடி துறை முகத்தில் நடைபெற்ற விழாவில் அப்போ தைய ஒன்றிய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ரூ.23,432 கோடியில் வெளித்துறைமுகத் திட்டம் நிறைவேற்றப் படும் என்று குறிப்பிட்டு, விரிவான திட்ட அறிக்கையையும் வெளியிட்டார். அந்த அமைச்சர் வேறு யாருமல்ல, இன்றைக்கு அரசியல் வெட்கம் எதுவு மின்றி பாஜகவுடன் கைகோர்த்துள்ள ஜி.கே.வாசன்தான் அவர்.

கிடப்பில் போட்ட மோடி அரசு
இதைத்தொடர்ந்து 2014ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பாஜக தலைமை யிலான மோடி அரசு அதிகாரத்திற்கு வந்தது. மோடி அரசின் முதல் பட்ஜெட் டில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி முந்தைய அரசின் மேற்கண்ட தூத்துக் குடி வெளி துறைமுகத் திட்டத்தை தங்க ளது அரசு நிறைவேற்றும் என்று உறுதி யளித்தார். வெளித்துறைமுகத் திட்டத்தின் முதல் கட்ட பணிகளுக்காக ரூ.11,635 கோடி செலவிடப்படும் என்று பட்ஜெட் உரையில் அறிவித்தார். 

ஆனால் அடுத்த பத்தாண்டு காலம் மோடி அரசு இத்திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டது. தூத்துக்குடிக்கு வெளி துறைமுக கொள்கலன் முனை யம் வரவே இல்லை. 

இந்த உண்மையை அப்படியே வங்கக் கடலில் மூழ்கடித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. 

10 ஆண்டுகள் கழித்து மீண்டும் முதலில் இருந்து தூத்துக்குடி வெளித் துறைமுகத்தை பற்றி பேசியிருக்கிறார்.