தூத்துக்குடி, பிப். 28 - தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்பட உள்ள ராக் கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் மோடி புதனன்று அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், இங்கு அமைக்கப்பட்டிருந்த தற் காலிக கான்கிரீட் ஏவுதளத்தி லிருந்து, ரோகிணி எனப் பெயரிடப்பட்ட ‘ஆர்எச்-200’ என்ற சவுண்டிங் ராக் கெட் புதனன்று பிற்பகல் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் தயாரிக் கப்பட்ட இந்த ராக்கெட் இந்திய பெருங்கடல் பகுதி யில், காற்றின் திசை வேகம் குறித்த தகவல்களை அறி ந்து கொள்ள உதவக் கூடிய தாகும். இந்த ராக்கெட்டின் தரவுகள் எதிர்காலத்தில் விஞ்ஞானிகளுக்கு பயன் படும்.