தூத்துக்குடி, ஜூன் 28- தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்னும் 6 மாதத்தில் இரவு நேர விமான சேவை தொடங்க வாய்ப்பு உள்ளதாக கனிமொழி எம்.பி. தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டத் தில் அவர் பங்கேற்றுப் பேசியது: தூத்துக்குடி விமான நிலையத்தில் ஓடுதளத்தை மேலும் நீட்டிக்கும் பணி யும், அகலப்படுத்தும் பணியும் நடை பெற்று வருகின்றன. மேலும், புதிதாக முனையம் அமைக்கும் பணி தொடங்கப் பட்டுள்ளது. இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு செப்டம்பா் மாதத்துக்குள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படு கிறது. விரிவாக்கப் பணிகள் முடிவுற்ற தும் சரக்கு விமான போக்குவரத்து, பெரிய வகை பயணிகள் விமான போக்கு வரத்து தொடங்கப்படும். இரவு நேரத்தில் விமான போக்குவரத்து சேவை தொடா்பான அனைத்துப் பணி களும் முடிவடைந்துவிட்டன. ஓடுதளத் தில் மட்டும் கொஞ்சம் பணிகள் மீத முள்ளன. இன்னும் 6 மாதங்களில் அந்தப் பணிகள் முடிவடையும் என அதி காரிகள் தெரிவித்துள்ளனா். இருப்பி னும், 4 மாதங்களுக்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு இரவு நேர விமான சேவை தொடங்கப்படும் என்றார் அவா். கூட்டத்தில், எம்.சி. சண்முகையா எம்எல்ஏ, மேயா் ஜெகன் பெரியசாமி, ஆட்சியா் கி. செந்தில்ராஜ், மாவட்ட எஸ்.பி. லோக. பாலாஜி சரவணன், விமான நிலைய இயக்குநா் என். சுப்பிரமணியன், மேலாளா் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.