districts

img

தடைசெய்யப்பட்ட தாதுமணல் பைகளை எடுத்துச்செல்ல முயன்ற 3 பேர் கைது

தடைசெய்யப்பட்ட தாதுமணல் பைகளை எடுத்துச்செல்ல முயன்ற 3 பேரை கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

முள்ளக்காடு அருகே பொட்டல்காடு பகுதியில் தனியார் குடோனில் தடைசெய்யப்பட்ட தாதுமணல் மூட்டை பைகளை, அத்துமீறி நுழைந்து லாரிகள் மூலம் எடுத்துச்செல்ல முற்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு  தூத்துக்குடி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்கனர் ( பொறுப்பு) , வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சென்ற போது, அங்கு தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி வில்லியம் என்பவரது மகன் லாரன்ஸ் இருதய ராஜ், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த நாகமலையான் மகன் புலியன், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த சித்திரை கிருஷ்ணன் மகன் சுந்தர் ஆகியோர் தடைசெய்யப்பட்ட தாதுமணல் மூட்டை பைகளை, அத்துமீறி நுழைந்து லாரிகள் மூலம் எடுத்துச்செல்ல முற்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, தூத்துக்குடி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்கநர் ( பொறுப்பு) , அளித்த புகாரின் பேரில் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்த லாரி, போர்க்லிப்ட் உள்ளிட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.