திருத்துறைப்பூண்டி, ஜூலை 3 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி தெற்கு ஒன்றிய 18 ஆவது மாநாடு அத்திமடை சந்துரு தியேட்டரில் ஞாயிறன்று காலை, அக்னி பாதை திட்டத்திற்கு எதிராக கண்டன முழக்கத்தோடு பேரணியாக வந்து துவங்கப்பட்டது. சங்கக் கொடியை ஒன்றியத் தலைவர் சி.வீரசேகரன் ஏற்றி வைத்தார். மாநாட்டை துவக்கி வைத்து சங்கத்தின் மாநிலச் செயலா ளர் எஸ்.பாலா உரையாற்றினார். புதிய தலைவராக சி.வீரசேகரன், செயலாளராக ஏ.கே.வேலவன், பொருளாளராக பி.பார்த்தி பன், துணைத் தலைவராக சதாம், துணைச் செயலாளராக பிரேம் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக இளைஞர் முழக்கம் இதழுக்கான 30 ஆண்டு சந்தா மாநிலச் செயலாளர் எஸ்.பாலா-விடம் கொடுக்கப் பட்டது.