திருவாரூர், ஜுன் 19- திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியம்,வேலங்குடி வருவாய் கிராமம், தென்கரை மாத்தூரில் அனும திக்கப்படாத புல எண்ணில் (தனி நபரு க்கு சொந்தமான இடத்தில்) சட்டவிரோ தமாக மண் திருட்டில் ஈடுபடும் நபர் மீது நடவடிக்கை எடுக்காத வருவாய்த் துறை மற்றும் பேரளம் காவல்துறை யை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நன்னிலம் வட்டாட்சியர் அலுவல கம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு நன்னிலம் ஒன்றிய செயலாளர் கே.எம். லிங்கம் தலைமை வகித்தார்,
ஒன்றியக்குழு உறுப்பினர் பி.இப்ரா ஹிம் சேட், வேலங்குடி கிளைச்செய லாளர் பி.செயராமன், திருக்கொட்டா ரம் கிளைசெயலாளர் வரத.வசந்த பாலன் ஆகியோர் முன்னிலை வகித்த னர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன் உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் நன்னி லம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிபிஎம் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.இதில் மண் திருட்டில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக செயல்படும் வேலங்குடி கிராம நிர்வாக அலுவலர் மீது துறை ரீதியான நடவ டிக்கை எடுக்கப்படும்,பேரளம் சரகம் வேலங்குடி கிராமத்தில் அத்து மீறி மணல் எடுக்கப்படுவதாக கருதப்படும் புல எண் 889 தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள திருவாரூர் உதவி இயக்குநருக்கு (புவியியல் மற்றும் சுரங்க துறை) கடித வரைவு அனுப் பப்பட்டுள்ளது,
பிரச்சனைக்குரிய புல எண்ணில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிலவுவ தால், இரு தரப்பினரும் நுழைவதற்கு தடை செய்திட வருவாய் கோட்ட அலு வலருக்கு பரிந்துரை செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டு வட்டாட்சி யர் எழுத்து மூலமாக உத்தரவாதம் அளித்தார்.இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டுள்ளது.