districts

ஜூன் 26.ல் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் முகாம்

திருவாரூர், ஜூன் 9- ஜூன்-26ல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மாற்றுத்திற னாளிகளுக்கான சிறப்பு முகாம் நடை பெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளுக்காக கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை முகாமில் அளிக்கலாம். மனுக்கள் உரிய துறை அதிகாரிகளிடம் சேர்க்கப்படும். மனுக்கள் அனைத்தும் அரசின் விதிகளுக்கு உட்பட்டு பரிசீலிக்கப்படுவதோடு, தீர்வு காணும் வகையிலுள்ள கோரிக்கைகளுக்கு  உரிய உதவி செய்யத் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற இதுவரை விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் இருப்பிட முகவரிக்கான ஆதாரம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்கா ளர் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிக ளுக்கான தேசிய அடையாள அட்டை, முத லமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை, தற்போதைய புகைப் படம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்  பிரதிகளோடு கலந்துகொண்டு விண்ணப் பிக்கலாம்.  மேலும் உதவி உபகரணங்கள், பரா மரிப்புத் தொகை கோரும் விண்ணப்பங்க ளையும் அளிக்கலாம்.இதற்கு முன்பு விண்ணப்பங்கள் அளிக்கப்பட்ட ஆதாரங் கள் இருந்தால் அவற்றையும் தவறாமல் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.