திருவாரூர், ஜூலை 6- தொழிலாளர் நலவாரியக் குளறு படிகளை களைந்திட வேண்டும். நல வாரிய கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருவா ரூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம், சுமைப்பணி தொழிலாளர் சங் கம், தையல் தொழிலாளர்கள் சங்கம், கட்டுமானத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் பெரிய மில் தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ் வாயன்று நடைபெற்றது. ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலா ளர் எம்.கே.என் அனிபா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முரு கையன், தலைவர் இரா.மாலதி, கட்டு மான தொழிலாளர் சங்க மாவட்ட தலை வர் பி.நடராஜன், சாலை வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ஜி.ரகுபதி, டாஸ்மாக் சங்க மாவட்டத் தலைவர் பி.என்.லெனின், முறைசாரா தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் உ. ராமச்சந்திரன், சுமைப்பணி சங்க செய லாளர் கே.கஜேந்திரன் உள்ளிட்டோர் பேசினர். ஏராளமானோர் பங்கேற்ற னர்.