districts

கொரோனா உயிரிழப்பு நிவாரணம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர்

திருவாரூர், ஏப். 3 - கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப் பட்டு இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கரு ணைத் தொகை வழங்குவதற்கு https://www.tn.gov.in/index.php இணையத் தளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங் களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.  இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் 1,196  மனுக்கள் பெறப்பட்டு 1,077 இனங்களுக்கு ரூ.50,000 வீதம் நிவாரணத் தொகை வழங்கப் பட்டுள்ளது, 16 மனுக்கள் பரிசீலினையில் உள்ளன. மேலும் 103 மனுக்கள் “இருமுறை  பெறப்பட்ட மனு மற்றும் பிற காரணங்களின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டுள்ளது”. இந்நிலையில் உச்சநீதிமன்றம் வழங்கிய  தீர்ப்பில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. 20.3.2022-க்கு முன்னர் ஏற்பட்ட கோவிட்-19 இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதா ரர்கள் வரும் 60 நாட்களுக்குள் (18.5.2022-க்குள்) மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும். 20.3.2022 முதல் ஏற்படும் கோவிட்-19 இறப்பு களுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக் களை சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப் பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம்  30 தினங்களுக்குள் தீர்வு காண வேண்டும்.  மேல் குறிப்பிட்டுள்ள காலக்கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாத வர்கள் அதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவ லரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனு வினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்ப டையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலை மையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும். எனவே கோவிட்-19 தொற்றுநோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தி னர் மேற்கண்ட உச்சநீதிமன்ற வழிகாட்டுத லின்படி, உரிய காலத்தில் மனு செய்து நிவா ரணம் பெற்று பயனடையுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

;