திருவாரூர், ஜூன் 8 - தமிழக அரசானது சுற்றுச்சூழல் விழிப்பு ணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேம்பாட்டு செயல் திறனுக்காக பசுமை முதன் மையாளர் விருது வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரி யம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மாவட்ட அளவிலான விருது குழு ஒன்றினை அமைத்து தகுதியானவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு’ என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு சுற்றுச் சூழலின் அவசியத்தை வலியுறுத்தி சிறப்பாக விழிப்புணர்வு பணி மேற்கொண்டமைக்காக ரூ.1 லட்சத்திற்கான காசோலையும், நற்சான் றிதழையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.