திருவாரூர் திரு.வி.க அரசு கலை அறிவியல் கல்லூரி (பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டது) மாணவர்கள் தேர்வுக்கட்டம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமைப்பின் மாவட்டத் துணைத் தலைவர் திருமுருகன், நிர்வாகிகள் பிரவீன்குமார், வீ.சந்தோஷ், ம.திருமுருகன், லிவிஸ்டியா, கமலி உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.