districts

திருத்துறைப்பூண்டி புறவழிச்சாலை பணிகள்  ஜூன் 30 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் நெடுஞ்சாலைத்துறை இயக்குநர் தகவல்

திருவாரூர், ஜன.8 - திருத்துறைப்பூண்டி புறவழிச்சாலை பணிகள் 2023 ஜூன் 30 ஆம் தேதிக்குள் முடிக் கப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்படும் என  சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய  இயக்குநர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி அருகே வேளூர் பாலத்தில் இருந்து நாகை பைபாஸ் சாலை வரை 2.6 கி.மீட்டர் தூரம் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் கோதண்டராமன் ஆய்வு  செய்தார். அதனை தொடர்ந்து புறவழிச் சாலையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.  பின்னர் அவர் கூறுகையில், தற்போது திருத்துறைப்பூண்டி புறவழிச்சாலையில் 19 பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வரு கிறது. மேலும் 4 அடுக்குகள் அமைக்கப்பட உள்ளன. இந்த பணிகள் வருகிற ஜூன் 30 ஆம் தேதிக்குள் முழுவதும் முடிவடைந்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப் படும்” என்றார்.  ஆய்வின் போது மாரிமுத்து எம்.எல்.ஏ., திருச்சி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, திருவாரூர் கட்டுமான மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் இளம்வழுதி, உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்து, இளநிலை பொறியாளர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.