திருவாரூர், ஜூன் 22 - ஓஎன்ஜிசியில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வேலை இழந்த ஊழியர்களுக்கு பணி வழங்க வேண்டும். கருணைத் தொகை வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ஊதிய பாக்கிகளை வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும். கொரோனா காலத்தில் உயிரிழந்த ஊழியர்கள் மற்றும் பணியில் இருக்கும்பொழுது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓஎன்ஜிசி ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் -வெள்ளக்குடி ஓஎன்ஜிசி KMPEPS அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஓஎன்ஜிசி சங்க மாவட்டச் செயலாளர் கே.வேல்ரத்தினம் தலைமை வகித்தார். சங்க உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.