திருவாரூர், ஏப்.11- மறைந்த முதலமைச்சர் கலைஞர் மு.கரு ணாநிதிக்கு சிலை மற்றும் முக்கிய வீதிக்கு அவரது பெயரை சூட்டுவது என்று திருவா ரூர் நகர்மன்ற முதல் கூட்டத்தில் தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. நகர்மன்ற தaலைவர் செ.புவனப்பிரியா முன்னிலையில் திங்களன்று நடைபெற்ற இக்கூட்டத்தில் நகர்மன்ற துணைத் தலைவர் அகிலா சந்திரசேகரன், மூத்த உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் திருவாரூர் தெற்கு வீதிக்கு ‘கலைஞர் வீதி’ என பெயர் சூட்டுவது, பனகல் சாலையில் டாக்டர் கலைஞர் பெயரில் வணிக வளாகம் கட்டுவது, நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும் சாலை, சாக்கடை வசதிகள், துப்புரவுப் பணிகள், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பொது சுகாதாரப் பிரிவிற்கு 2022-23 ஆம் ஆண்டிற்கு பல்வேறு பணிகளுக் காக 63 கோடி ரூபாயும் தீபாவளி அட்வான்ஸ் மற்றும் ஊதியம் உள்ளிட்ட செலவினங்களுக் காக 7 கோடி ரூபாயும் பொது நிதியிலிருந்து செலவிட கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.