districts

img

விவசாயத் தொழிலாளர்கள் மாநில மாநாடு ஜோதி, கொடிப்பயணத்திற்கு வரவேற்பு

மயிலாடுதுறை/திருவாரூர், பிப்.4- அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் 10-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு புதுக் கோட்டையில் சனிக்கிழமை மாலை பேரணி-பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது.  மாநாட்டிற்கு மயிலாடுதுறை மாவட்டம், திருமெய்ஞானம் தியாகி கள் நினைவிடத்திலிருந்து ஜோதி  சனிக்கிழமை புறப்பட்டது. தியாகிகள் ஜோதியை சங்கத்தின் மூத்த தலைவர் பி.சீனிவாசன் எடுத்துக் கொடுக்க மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் ஜி.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் காபிரியேல் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், மாவட்டத் தலைவர் டி.சிம்சன் உள்ளிடட பலர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்
வெண்மணித் தியாகிகள் நினை வாக எடுத்துச் செல்லப்படும் ஜோ தியை தியாகிகள் நினைவிடத்தில் கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினரும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினரு மான வி.பி.நாகைமாலி சுடரை பய ணக்குழுவிடம் எடுத்துக் கொடுக்க, விவசாயத் தொழிலாளர்கள் சங்கத் தின் நாகப்பட்டினம் மாவட்டச் செய லாளர் எம்.முருகையன் பெற்றுக் கொண்டார்.
திருச்சிராப்பள்ளி
திருச்சிராப்பள்ளியிலிருந்து தோழர் கே. செல்லம்மாள் நினைவு ஜோதி கொண்டு செல்லப்பட்டது. நிகழ்விற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் புறநகர் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாணநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் ஜோதியை எடுத்துக் கொடுக்க சங்கத்தின் மாநிலச் செய லாளர் பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்ச நல்லூர் கிழக்கு ஒன்றியச் செயலா ளர் கனகராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் செல்வம், ஒன்றியத் தலைவர் நல் லையன், மாவட்டப் பொருளாளர் கண்ணன், லால்குடி செல்வி, சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவ ராஜ், மாவட்டத் தலைவர் பன்னீர் செல்வம், கட்சியின் மண்ணச்ச நல்லூர் மேற்கு ஒன்றியச் செயலா ளர் மனோகரன் உள்பட ஏராளமா னோர் பங்கேற்றனர்.
கொடிப்பயணம்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் திருமீயச்சூரில் உள்ள தியாகி ஜெ.நாவலன் நினைவிடத்தில் இருந்து 10- வது மாநில மாநாட்டுக் கொடிப் பயணம் புறப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாநிலப் பொது செயலாளர் சாமி.நடராஜன் கொடியை அமைப்பின் கொடியை விவசாயத் தொழிலாளர் கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் எம்.கலைமணியிடம் வழங்கினார். நிகழ்வில் மாநிலக் குழு உறுப்பினர் மாரியம்மாள், விவ சாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம், நகர் செயலாளர் சீனி.ராஜேந்திரன் மாவட்டக் கவுன்சிலர் ஜெ.முகமது உதுமான் ஒன்றியச் செயலாளர் சதீஸ்.சரவணன், தியாகு ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர். ஜோதி, கொடிப்பயணக் குழு வினரை பல்வேறு இடங்களில் விவ சாயத் தொழிலாளர்கள், விவசாயி கள் திரண்டு வரவேற்பளித்தனர்.
புகைப்படக் கண்காட்சி
மாநாட்டையொட்டி விவசாயத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க போராட்டம், தியாகங்களை நினைவு கூறும் வகையில் மாநாட்டு அரங்கில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சி யை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் திறந்துவைத்தார். நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண் முகம், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர், மாநிலத் துணைத் தலைவர் டெல்லி பாபு, மாநிலப் பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநிலப் பொரு ளாளர் எஸ்.சங்கர், மாநிலச் செய லாளர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மாநிலக்குழு உறுப்பினர் வீ.மாரியப்பன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

;