திருவாரூர், ஜூலை 30 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்துக்குட் பட்ட ஆனைக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியின் கணித பாட ஆசிரியர் கார்த்திகைசாமி, அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப் பதாக புகார் எழுந்துள்ளது. அப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக பள்ளி யில் புகாரளித்துள்ளனர். மேலும் ஆடியோ ஆதா ரங்களுடன் மாவட்டக் கல்வித் துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் துறைக்கு பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. கணித ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே அந்த ஆசிரியர் 15 நாட்கள் விடுப் பில் சென்றுள்ளார். இது போன்ற சம்பவங்கள் கல்வி வளாகங்களில் மாணவி களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கி, மீண்டும் கிராமப் புற மாணவிகளை கல்வி நிலையங்களுக்கு அனுப்பு வதில் பெரும் பாதிப்பை ஏற் படுத்திவிடும். எனவே பள்ளிக் கல்வித்துறை உரிய முறையில் தலை யீட்டு தொடர்புடைய ஆசிரி யர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.