திருவாரூர், பிப்.1 - திருவாரூர் ஒன்றியம் அலிவலம் ஊராட்சியில் வசித்து வரும் ஆர்.கனக வள்ளி (38) தனது கணவர் எம்.ரமேஷ் (40) கடந்த 2021 ஆகஸ்ட் 29 ஆம் தேதி சந்தேகமான முறையில் மரணமடைந் ததை தொடர்ந்து அவரது மரணத்தில் உண்மையை வெளிக்கொண்டு வருவ தற்கு தொடர் போராட்டத்தை நடத்தி வரு கிறார். நன்னிலம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதோடு தமிழக முதல்வர், தமிழக காவல்துறை தலைவர் மற்றும் திரு வாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பா ளர்கள் ஆகியோரிடத்திலும் புகார் மனு அளித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தனது கணவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தோடும், துயரத்தோடும் தனது இரண்டு குழந்தைகளான ஆர்.கிஷோர் (7), ஆர்.ஹரிவர்ஷன் (1) ஆகியோருடன் சென்று நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், பாக்கம் கோட்டூரில் உள்ள ஜமாத் தலைவர் முகமது உஸ்மானிடம் ஆதாரங்களுடன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், அதே ஊரைச் சேர்ந்த முகமது சித்திக் மகன் முகமது மாலிக் மற்றும் நத்தர் அலி மகன் முகமது முஸ்தப்பா ஆகியோர் தனது கணவர் மர்மமான முறையில் இறப்ப தற்கு காரணமானவர் என்றும், மேலும் 2 பவுன் தங்க சங்கிலி, ரொக்கப்பணம் ரூ.50 ஆயிரம், அண்மையில் வாங்கப்பட்ட புதிய செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றுள் ளனர். மேற்கண்ட நபர்களை உரிய முறையில் விசாரிப்பதற்கும் நீதி கிடைப்பதற்காக தான் எடுக்கவுள்ள சட்ட நடவடிக்கைக்கு உதவிட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சூழ்நிலையில் தாங்கள் வெளிநாடு செல்ல வேண்டும். எனவே எங்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாமென்று காவல்துறையினரிடம் மேற்கண்ட நபர்கள் கேட்டுக் கொண்டதாக தெரியவரும் நிலை யில், மேற்கண்ட சந்தேக நபர்களில் ஒருவரான முகமது மாலிக் தற்போது வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டதாக தெரிகிறது. இதன் மூலம் காவல்துறை இந்த நபர்களுக்கு உதவி யிருப்பார்களோ என்ற சந்தேகம் அதிகமாகி யுள்ளது. எனவே கடந்த ஜன.20 ஆம் தேதி கண வனை இழந்த ஆர்.கனகவள்ளி கொடுத்து உள்ள புகாரின் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தற்போது ஊரில் சுற்றிக் கொண்டிருக்கிற முஸ்தப்பாவை கைது செய்வதோடு, உரிய புலன் விசாரணை மேற் கொண்டு நன்னிலம் காவல்துறையினர் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.நவமணி