districts

img

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்புப் பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

திருவாரூர், மார்ச் 13- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புப் பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ஏ.தமிழ்செல்வன் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பி னர் டி.ராஜசேகர், ஜெ.அமர்நாத், ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் என்.வசந்தன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வா கிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஊரக  வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் முறையீடுகளின் போது நிர்வாகம் ஒப்புக்கொண்ட ஊராட்சி செயலர் பணி விதிகள், சிறப்பு நிலை, தேர்வு நிலை, அர சாணைகளை உடனே வெளியிட வேண்டும், கணினி உதவியாளர் பணி வரன் முறை மற்றும் ஊதிய மாற்ற அர சாணைகளை உடனே வெளியிட வேண்டும், திருவாரூர் மாவட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி யாளர் நிலையில் பதவி உயர்வுகளை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன.